நிரந்தரமான வேலை, வருமானம் உயர, தாராளமான பணவரவு, கடன் தீர்க்க, என உங்க வாழ்க்கையை புரட்டி போடும் அனைத்து இன்னல்களும் தீர அரச மரத்தடியில் இந்த தண்ணீரை ஊற்றினால் போதும்.

- Advertisement -

நல்ல நிரந்தரமான ஒரு வேலை கிடைத்து அதில் போதுமான வருமானம் கிடைத்து கை நிறைய பணப்புழக்கம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் யாரும் கிடையாது. இன்று அனைவரும் ஓடி ஓடி அலைவதே இதற்காகத் தான். பணவரவு, வேலை இரண்டையும் சரியாக இருந்தாலே நம்முடைய வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இரண்டுக்கும் சேர்த்து ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நிரந்தர வேலை கிடைத்து வருமானம் உயர
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். அதுவும் அரச மரத்தடியில் தான் இதை செய்ய வேண்டும். எனவே பரிகாரத்திற்கு தேவையான அனைத்தையும் முதல் நாள் இரவே நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சிகப்பு கற்கண்டு (பனங்கற்கண்டு )தேவை. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அத்துடன் ஒரு சொம்பு (சில்வரை தவிர மற்ற எந்த சொம்பையும் பயன்படுத்தலாம்)ஒரு அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சு திரி இத்துடன் ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவு ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அத்துடன் இனிப்பிற்காக வெல்லம் அல்லது சர்க்கரை இரண்டில் ஏதாவது ஒன்றை கலந்து அதையும் எடுத்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்தப் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அரச மரத்தடிக்கு சொல்லுங்கள். அது கோவில் இருக்கும் அரசமரமாக இருந்தாலும் விசேஷம் தான்.

- Advertisement -

இப்போது அந்த சொம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் நீங்கள் வாங்கி வந்த கற்கண்டை பொடி செய்து போட்டுக் கொள்ளுங்கள். இந்த கற்கண்டை சேர்த்தவுடன் தண்ணீரின் நிறம் மாற வேண்டும் அந்த அளவிற்கு கற்கண்டு போடுங்கள். அதன் பிறகு கிழக்கு முகமாக நின்று கொண்டு இந்த தண்ணீரை அரச மரத்தின் அடியில் வேர்ப்பகுதியில் நீங்கள் எந்த வேண்டுதலுக்காக ஊற்றுகிறீர்களோ அதை மனதார வேண்டி ஊற்றுங்கள்.

அதன் பிறகு அரச மரத்தில் இருந்து ஏழு அரசை இலையை எடுத்து அந்த இலைகளை ஒன்றாக வைத்து அதன் மேல் நீங்கள் கொண்டு சென்ற அகலை வைத்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்த பிறகு அரச மரத்தை தொட்டு வணங்கி எட்டு முறை வலம் வர வேண்டும். இதன் பிறகு நீங்கள் கொண்டு சென்ற பச்சரிசி மாவில் அரச மரத்தடியில் வைத்துவிட்டு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:ந்த தெய்வத்தை எந்த மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் என்ற இந்த சூட்சமத்தை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும், வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தைகே இடமில்லை.

இந்த பரிகாரத்தை எட்டு சனிக்கிழமைகளில் காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் செய்து விட வேண்டும். மாலையில் செய்யக் கூடாது இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் போது நிச்சயமாக நிரந்தரமான வேலை கிடைப்பதுடன் பணவரவு தாராளமாக கிடைக்கும் இவை இரண்டும் சரியாக இருந்தாலே கடன் இல்லாத வாழ்க்கை வாழலாம். இந்த அரச மர பரிகாரத்தை நம்பிக்கை உடையவர்கள் நம்பிக்கையுடன் செய்து உங்களின் பணவரவையும் வேலை வாய்ப்பையும் பெருக்கிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -