பண வரவு அதிகரிக்க பரிகார முடிச்சு

poojai arai cash
- Advertisement -

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற இரண்டு விஷயங்கள் கட்டாயமாக தேவை. முதலாவது கடன் இருக்கக் கூடாது. அடுத்து பணவரவு அதிகமாக இருக்க வேண்டும் இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். பண வரவு தாராளமாக இருந்தாலே கடன் என்ற வார்த்தைக்கு வழியில்லை.

சரி இந்த பணவரவு தாராளமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் கட்டாயமாக உழைக்க வேண்டும் நம்முடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அப்படி இருந்தும் பலருக்கும் வருமானம் போதாத நிலைதான் இன்றளவும் உள்ளது அதன் காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

- Advertisement -

இப்படியான பணம் அதிகப்படியாக நமக்கு வர வேண்டும் அதற்கு பணம் ஈர்ப்பு தன்மை நம்மிடமும் நம் வீட்டில் எப்பொழுதும் இருக்க வேண்டும் இதற்கு பல பரிகார முறைகள் இருந்தாலும் இந்த ஒரு எளிமையான பரிகார முறையை செய்யும்பொழுது பணவரவு எப்போதும் தாராளமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவு தாராளமாக பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும் வெள்ளிக்கிழமை என்றாலே அரி மகாலட்சுமி தாயார் உடையது தான் அதேபோல் சுக்கிர ஓரை என்றால் கேட்க வேண்டாம் அது சுக்கிர அனுகிரகத்தை தரக்கூடிய நேரம். செல்வத்தை அருளக்கூடிய இந்த இருவரின் ஆசியுடன் செய்யக்கூடிய இந்த பரிகாரம் நிச்சயம் நம் வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் சில பொருட்களை வாங்க வேண்டும் முதலாவதாக ஒன்பது வசம்பு வாங்க வேண்டும் அடுத்து சிறிதளவு வெட்டிவேறி வாங்கிக் கொள்ளுங்கள் இத்துடன் 9 ஏலக்காய் ஒன்பது கிராம்பு கொஞ்சம் பச்சை கற்பூரம் இவை எல்லாம் முதல் நாலே வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள் அதேபோல் ஒரு வெள்ளை நிற துணியை மஞ்சளில் நனைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை அறையில் தீபம் ஏற்றி விடுங்கள் முதலில் இந்த ஒன்பது வசந்தம் மஞ்சள் நிற தனி தனியாக கட்டுங்கள் அதன் பிறகு வாங்கி வைத்த மற்ற பொருட்களை எல்லாம் இத்துடன் சேர்த்து மஞ்சள் நிற துணியில் வைத்து மஞ்சள் நிற ஒரு முடிச்சாக கட்டுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை மகாலட்சுமி தாயார் சுக்கிரன் குபேரர் போன்ற பணத்திற்கு அதிபதியான தெய்வங்களை மனதில் நிறுத்தி பணவரவு தாராளமாக இருக்க வேண்டும் கடன் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சு உங்கள் குலதெய்வத்தை நினைத்து குலதெய்வ படம் இருந்தால் அங்கு வைத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் பூஜை அறையில் சற்று உயர்த்தில் வையுங்கள் கீழே வைக்கக் கூடாது.

இந்த முடிச்சில் உள்ள வாசங்கள் முழுவதுமாக தேர்ந்து பெற்றது என்று உங்களுக்கு தோன்றும் போது இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு வேறு முடிச்சை இதேபோல வெள்ளிக்கிழமை சுக்கிர குறையும் கட்டி வைத்து விடுங்கள் இந்த ஒரு முடிச்சு உங்கள் வீட்டில் இருக்கும் பொழுது பணம் இருப்பு அதிகரிக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் அதுமட்டுமின்றி மகாலட்சுமி தாயார் குலதெய்வம் சுக்கிரன் இவர்களுடைய பரிபூரண அருளும் கிடைக்கும்.

எத்தனையோ ஒரு சேர செய்யப்படும் இந்த பரிகாரமானது நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்ல பணவரவை ஏற்படுத்தி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த பரிகார முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -