வெள்ளி செவ்வாய்கிழமையில் மட்டும் இந்த தண்ணீரை உங்க வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். பணம் வரும் திசை தெரியாமல் அசுர வேகத்தில் உங்களை வந்தடைவது உறுதி.

mahalakshmi cash
- Advertisement -

நம்முடைய சாஸ்திரப்படி வெள்ளி செவ்வாய் இரண்டுமே வழிபாட்டிற்குரிய நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு தினங்களிலும் செய்யப்படும் எந்த ஒரு வழிப்பாடும் பூஜையும் விசேஷமானதாகவும் இதன் மூலம் குடும்பத்திற்கு பலவித நன்மைகள் கிடைக்கும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்போது இந்த வெள்ளி செவ்வாயில் செய்யும் பூஜையினால் நம்முடைய பணவரவை எப்படி பெருக்கிக் கொள்ளலாம் என்பதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டில் பணம் வரவு அதிகரிக்க
நம்முடைய வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே செல்ல இரண்டு விஷயங்கள் அடிப்படையாக தேவை ஒன்று எதிலும் முனைப்புடனும் வேகத்துடனும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறங்கும் காரியத்தில் நல்ல பலனை பெற வேண்டும். இந்த இரண்டிற்கும் தேவையான ஆற்றல் வெள்ளி செவ்வாயில் வணங்கக் கூடிய இந்த இரண்டு தெய்வங்களின் கையில் உள்ளது.

- Advertisement -

செவ்வாய் கிழமை செவ்வாய் கிரகத்திற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகமானது விரைவாக செயல்படக்கூடியது. அதே போல் வெள்ளிக்கிழமை ஆனது சுக்கிர பகவானுக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது சுக்கிர திசையானது நம் வாழ்வில் வந்து விட்டால் அதிர்ஷ்டத்திற்கு தடையே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போது இந்த இரண்டு தெய்வங்களுக்கு உரிய சிறப்பான மலர்களை வைத்து அந்தந்த நாளில் பூஜை செய்து பலனை பெறக்கூடிய பரிகாரத்தை தான் நாம் செய்யப் போகிறோம்.

செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாளாக இருப்பினும் கிரகத்தின் தெய்வமான முருகருக்கு தான் அன்றைய தினம் விசேஷமான பூஜைகள் செய்வோம். முருகருக்கு உகந்த மலரான அரளியை அன்றைய தினம் நாம் பூஜைக்கு கட்டாயமாக பயன் படுத்த வேண்டும். அதே போல் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்குரிய நாளாக இருந்தாலும் அதற்கான தெய்வம் மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை மலரை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

நாம் வீட்டில் பூஜை செய்தாலும் சரி அல்லது ஆலயத்தில் செய்தாலும் சரி அபிஷேகம் செய்வதை காட்டிலும் ஆயிரம் மடங்கு பலனை கொடுக்கக் கூடியது இந்த மலர் அர்ச்சனை என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மலரை எடுத்து தெய்வத்திற்கு அர்ச்சனை செய்யும் போதும் அவர்களுடைய அஷ்டோத்திர நாமத்தை சொல்லி ஜெபிப்பார்கள். அதன் பிறகு அந்த மலர் இறைவனின் பாதத்தை அடைகிறது. இப்படி இறைவன் திருவடிகளில் சேர்ந்த மலருக்குள்ள விசேஷம் நாம் வேறு எந்த அபிஷேகத்திலும் கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு விசேஷமாக செய்யப்படும் இந்த மலர் அர்ச்சனை செய்த பிறகு இறைவனின் திருவடிகளில் இருக்கும் அந்த மலரை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்து அந்த தண்ணீரில் இந்த மலரை போட்டு வைத்து, தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கும் போது வீட்டில் இருக்கும் அத்தனை தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றலும் நீங்கி வீட்டிற்கு பணவரவும் நல்ல ஒரு லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நுழையும் நெகட்டிவ் எனர்ஜியை அப்படியே வெளியே விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. நிலை வாசல் கதவை திறந்தவுடன் எல்லோர் கண்களுக்கும் தெரியும்படி வைக்க வேண்டிய அந்த 1 பொருள் என்ன?

அது மட்டும் இன்றி இந்த மலர்களை நீங்கள் பணம் வைக்கும் இடம், தொழில் செய்யும் இடங்களில் வைக்கும் போது தொழில் விருத்தி வீட்டிற்கு பணவரவு போன்றவை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு தினங்களில் இந்த இரண்டு மலர்களால் இவர்களை அர்ச்சனை செய்து அந்த மலரை கொண்டு உங்களுடைய வாழ்க்கையை வசந்தமானதாக மாற்றி கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -