வீட்டில் நுழையும் நெகட்டிவ் எனர்ஜியை அப்படியே வெளியே விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. நிலை வாசல் கதவை திறந்தவுடன் எல்லோர் கண்களுக்கும் தெரியும்படி வைக்க வேண்டிய அந்த 1 பொருள் என்ன?

nilai-vasal
- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் வரக்கூடிய நல்லது கெட்டது, இன்பம் துன்பம் இப்படி எல்லாவற்றையும் முதலில் பார்க்கக் கூடியது நிலை வாசல் தான். வீட்டில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கக் கூடாது என்பதை தீர்மானிப்பதும் இந்த நிலை வாசல்தான். நிலைவாசல் படி ஆட்டம் கண்டு விட்டால், நம்முடைய குடும்பம் மொத்தமும் ஆட்டம் கண்டுவிடும்.

ஒரு வீட்டில் நிலை வாசல் படி எவ்வளவுக்கு எவ்வளவு கவனிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறதோ, அந்த அளவுக்கு அந்த வீட்டின் கவுரவம் தலை நிமிர்ந்து நிற்கும். ஒவ்வொரு வீட்டிலும் நெகட்டிவ் எனர்ஜி நுழையாமல் இருக்க, நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள் என்ன, நிலை வாசல் கதவை திறந்தவுடன் எல்லோர் கண்களிலும் படும்படி வைக்க வேண்டிய பொருள் என்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

- Advertisement -

நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்:
நிலை வாசலில் என்ன வைக்கலாம் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு சில விஷயங்களை நாம் தெரிந்து வைத்துக் கொள்வோம். நிலை வாசல் என்பது நம்முடைய வீட்டின் தலை வாசல். அந்த நிலை வாசலை நம்முடைய குல தெய்வமாக பாதிக்க வேண்டும். அதேபோல அந்த நிலை வாசலில் தங்கி இருப்பவள் மகாலட்சுமி. அந்த இடத்தில் முழு உரிமையும் மகாலட்சுமிக்கு மட்டுமே உண்டு. வாசலை கடக்கும்போது குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் நிலை வாசல் படியை கடந்து தான் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.  உங்களுடைய நாள் தொடங்கும் காலை நேரத்தில், குலதெய்வத்தையும், மகாலட்சுமியும் நினைத்துக் கொண்டால் மிக மிக நல்லது. நிலை வாசல் படியில் எப்போதும் மாயிலை, அருகம்புல், வேப்ப இலை, அரச இலை, இந்த நான்கு இலைகளில் ஏதாவது ஒரு இலையை நிலை வாசலில் சொருகி வையுங்கள். இந்த இலை காய்ந்த பிறகு மாற்றலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் காய்ந்திருந்தாலும் பரவாயில்லை இப்படிப்பட்ட இலைகளில் ஏதாவது ஒரு இலையை நிலை வாசலில் சொருகி வையுங்கள். இது நெகட்டிவ் எனர்ஜியை உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காது.

- Advertisement -

அடுத்தபடியாக நிலை வாசல் கதவை திறந்தவுடன் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் கண்ணாடி இருக்க வேண்டும். இதை வாஸ்து கண்ணாடி என்றும் சில பேர் சொல்லுகிறார்கள். இந்த கண்ணாடியை தினந்தோறும் துடைத்து சுத்தமாக பராமரித்து வர வேண்டும். ஆனால், தினமும் வீட்டில் இருப்பவர்கள் முகம் பார்க்கவோ, தலை சீவகவோ, பொட்டுயிட்டுக் கொள்ளவோ, அழகு பார்க்கவோ இந்த கண்ணாடியை பயன்படுத்தக் கூடாது.

வீட்டிற்குள் வரும் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்த்து அப்படியே திரும்பவும் வெளியில் அனுப்பக்கூடிய சக்தி இந்த நிலை வாசல் படிக்கு உள்ளே வைக்கும் கண்ணாடிக்கு இருக்கிறது. நிலை வாசல் கதவை திறந்தவுடன், வீட்டிற்கு உள்ளே எதிரே சுவர் இருக்கும் அல்லவா. அந்த சுவற்றில் கண்ணாடியை மாட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாரத்தில் ஒரு நாள் காகத்திற்கு இந்த உணவை வைப்பதால் கர்ம வினைகள், பித்ரு தோஷம் நீங்கி உங்க அடுத்த தலைமுறை கூட பேரும் புகழும் பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

வீட்டிற்குள் நுழைப்பவர்களுடைய முகம் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி இருக்க வேண்டும். இதற்காகவே கடைகளில் வாஸ்து கண்ணாடி என்று சொல்லி விற்கிறார்கள். அதை வாங்கி மாட்டினாலும் சரி அல்லது சாதாரண கண்ணாடியை மாற்றினாலும் சரி, அது உங்களுடைய சௌகரியம். இந்த கண்ணாடி உங்களுக்கு முழுக்க முழுக்க நேர்மறை ஆற்றலை கொடுத்துக் கொண்டே இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -