செல்வம் சேர நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே விஷயம் என்ன? இதை செய்தால் பணத்தை தேடி நீங்கள் அலைய வேண்டியதில்லை அதுவே உங்களை தேடி வரும்!

cash-murugan
- Advertisement -

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு முதல் எல்லா பொருட்களும் பணத்தால் வாங்கப்படுகின்றன. இங்கு பணமே பிரதானமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பணம் மற்றும் செல்வங்களை அடைவதற்கு மனிதன் செய்ய வேண்டியது என்ன? இந்த ஒரே ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் பணத்தை தேடி நாம் போக வேண்டியதில்லை! அதுவே நம்மை தேடி தானாக வந்து சேரும். அப்படியான ஒரு நல்ல தகவல்களை பற்றிய பதிவு தான் இது!

முந்தைய காலங்களில் தேவைக்கு மட்டுமே பணத்தை சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று நம் தேவையை தாண்டி ஆடம்பர விஷயங்களுக்கும் பணத்தை ஈட்ட வேண்டி ஓடிக் கொண்டிருக்கிறோம். நம் இளமையை, நம் நேரத்தை பணத்தை ஈட்டுவதற்காக மட்டுமே செலவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும். இளமையும், நேரமும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் கடைசியில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? பணத்தை ஈட்டுவதற்காக மட்டுமே நீங்கள் பிறந்தீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கிடைக்கின்ற பணத்தை மகிழ்ச்சியுடனும், குடும்பத்துடனும் அனுபவிக்க வேண்டும். அன்றாட செலவுகள், ஆடம்பரச் செலவுகளுக்காக நீங்கள் வருமானம் செய்வதை விட உங்களுடைய மகிழ்ச்சிக்காகவும், குடும்பத்தின் சந்தோஷத்துக்காகவும் செலவிடும் படியாக திட்டமிடுங்கள். நீங்கள் எதை செய்தால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பாருங்கள்.

ஒருவருக்கு பேச்சுத் திறமை அதீதமானதாக இருக்கும். அவர்கள் பேசினால் தான் வருமானம் வந்து சேரும். இத்தகையவர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் திறமையை நிரூபிக்க மென்மேலும் பேச்சு திறமையை வளர்த்து பேசிக் கொண்டே இருக்கலாம். ஆனால் பேச்சுக்கும் வருமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் வெறுமனே பேசிக் கொண்டிருப்பது தேவையற்ற விஷயம். எதற்காக பேசுகிறோம்? என்பதை கவனிக்க வேண்டும். பேசுவதிலும் நம்முடைய சக்தி விரயமாகிறது.

- Advertisement -

நம்முடைய சக்தியை நாம் எதை நோக்கி செலுத்துகிறோமோ, அதன் மூலமே நமக்கு வருமானமும், பணமும், செல்வமும் வந்து சேர்கிறது. எனவே நீங்கள் உங்களுடைய சக்தியை எதை நோக்கி செலுத்த வேண்டும்? என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். சிலருக்கு எழுத்தால், சிலருக்கு பேச்சால், சிலருக்கு உடல் உழைப்பினால், சிலருக்கு சிந்தனையால், சிலருக்கு மொழியால், சிலருக்கு குரலினால் வருமானத்தை ஈட்ட முடிகிறது. இப்படிப் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது. நீங்கள் எந்த விஷயத்தின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமோ, அந்த விஷயத்திற்காக மட்டுமே உங்களுடைய சக்தியை செலவு செய்ய வேண்டும். மற்ற விஷயங்களுக்காக உங்கள் சக்தியை விரையம் ஆக்கக் கூடாது.

பேச வேண்டிய அவசியமே இல்லாத இடத்தில் பேச்சை தவிர்க்க வேண்டும். இப்படி உங்களுடைய சக்தியை சரியான திசையை நோக்கி திருப்பி விட முயற்சி செய்யுங்கள். மற்ற எல்லா விஷயங்களையும் உங்களுக்கு பிடித்தே போனாலும் அதை புறக்கணியுங்கள். ஒரு அளவுக்கு மேல் நம்முடைய ஆசைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. இந்த பூமி நமக்காக உருவானது என்கிற உணர்வு நமக்குள் இருக்க வேண்டும். இந்த பூமியில் நாம் யார்? என்பதை மற்றவர்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். இதனால் பணத்தை சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தை கொண்டு நாமும், நம்முடைய குடும்பமும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக நினைத்து செயல்பட்டால் நீங்கள் நினைத்ததை அடைந்தே தீருவீர்கள் என்கிறது சாஸ்திரம். எனவே உங்கள் சக்தியை சரியான வழியில் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

- Advertisement -