பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமெனில், செவ்வாய்க்கிழமையில் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

Murugan Cash
- Advertisement -

பணத்தின் தேவையை பற்றி சொல்வதென்றால் நாளெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் அவ்வளவு பணத் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலைமை தான் எங்கும் இருக்கிறது. இந்த நிலை மாறி நம் தேவைக்கு பணம் தாராளமாக கிடைக்க, பண வரவு அதிகரிக்க செவ்வாய்க் கிழமைகளில் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் அது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி தீபம் ஏற்றுவது என்பது எல்லாம் இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு வருவது மகாலட்சுமி தாயார் தான். செல்வத்தை கொடுக்கும் கடவுளாக வணங்குவது திருப்பதி வெங்கடாஜலபதியை தான். ஆனால் பண வரவிற்காக நாம் வணங்க வேண்டிய இன்னொரு முக்கியமான கடவுள் நம்முடைய கந்தக் கடவுளான பழனி மலையில் உள்ள முருகப்பெருமானை தான்.

- Advertisement -

முருகப்பெருமானை பழனி மலையில் ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் அதிர்ஷ்டங்கள் பெருகும் என்ற ஐதீகம் உண்டு. அதே ராஜா அலங்காரத்தில் இருக்கும் முருகப்பெருமானின் படத்தை வைத்து தான் இப்போது நாம் இந்த வழிபாடு செய்யப் போகிறோம்.

பணம் வர செய்ய வேண்டிய வழிபாடு
முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. அந்த நாளில் தான் இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். இந்த வழிபாடு செய்ய ஆறு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல ஆறு அகல் விளக்கு, சிகப்பு திரி, பசு நெய் வேண்டும். நெய்வேத்தியமாக பஞ்சாமிர்தம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை நாள் முழுவதிலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்துடன் இருக்கும் படத்தை வைத்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி பூவில் மாலை தொடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு படத்தின் முன்பு 6 வெற்றிலையும் வைத்து அதன் மேல் ஆறு அகல் விளக்கையும் வைத்த பிறகு பசு நெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றிய பிறகு நாம் செய்து வைத்த நெய்வேத்தியும் அவருக்கு படைக்க வேண்டும்.

அதன் பிறகு உங்களுக்கு கந்த சஷ்டி கவசம் படிக்க முடிந்தால் தீபத்தின் முன்பு அமர்ந்து முழுவதுமாக படியுங்கள். முடியாதவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை உங்கள் அலைபேசியில் பாடலாக கூட கேட்டு வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்து வாருங்கள். உங்களுக்கு பண தொடர்பான எந்த பிரச்சனைகள் இருந்தாலும் முருகப் பெருமான் தீர்த்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. செவ்வாய்க் கிழமையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை 6 வாரங்கள் மட்டுமின்றி தொடர்ந்து செய்யலாம். ஆனால் ஆறு வாரங்கள் மட்டும் வெற்றிலை மீது இந்த தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு நாம் எப்போதும் ஏற்றுவதைப் போல  சாதாரணமாக தீபம் ஏற்றி வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: வாங்கிய இடத்தில் வீடு கட்ட முடியலையா? கட்டிய வீடு பாதியில் நிற்கிறதா? 48 நாட்களில் நினைத்ததை முடிக்க யாரை வழிபடனும் தெரியுமா?

எந்த ஒரு செயலையும் நாம் தொடங்குவதற்கு முன்பாக நம்முடைய முயற்சியும் நம்பிக்கையும் வேண்டும். இந்த வழிபாடை செய்யும் பொழுது இந்த முயற்சி தன்னம்பிக்கை போன்றவற்றையும் இவர் நமக்கு அருளுவார். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து முருகப்பெருமானின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்வை செல்வ வளத்துடன் வாழலாம்.

- Advertisement -