வாங்கிய இடத்தில் வீடு கட்ட முடியலையா? கட்டிய வீடு பாதியில் நிற்கிறதா? 48 நாட்களில் நினைத்ததை முடிக்க யாரை வழிபடனும் தெரியுமா?

lakshmi-sengal0
- Advertisement -

இடம் வாங்கி விட்ட பிறகு எப்படியாவது அதில் ஒரு வீடு கட்டி விட மாட்டோமா? என்று பலரும் கனவு கண்டு கொண்டு இருப்பார்கள். அதே போல கட்டிய வீட்டை சிலரால் முழுதாக முடிக்க முடியாமல் அப்படியே பாதியில் நின்று போய் இருக்கும். இப்படிப்பட்ட வீட்டை எப்படியாவது கட்டி முடித்து அங்கு குடியேறி விட மாட்டோமா? என்றும் வேண்டி கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் 48 நாட்களில் உங்கள் கனவுகள் நிறைவேற எப்படி யாரை வழிபட வேண்டும்? என்பதைத்தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனால் தான் என்னவோ ‘பெரியவர்கள் வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார்’ என்கிற ஒரு பழமொழியை வைத்தார்கள். குருட்டாம்போக்கில் எப்படியோ கட்டி விடுவோம் என்று நம்பிக்கையுடன் ஆரம்பித்து விடுவோம் ஆனால் இடையில் பணம் இல்லாமலும் அல்லது கட்டுவதற்கு ஆள் வராமலும் கட்டுமான பணி பாதியில் நின்று விடும். ஒரு முறை பாதையில் நின்று விட்டால் அதை மீண்டும் துவங்குவது என்பது அசாதாரண விஷயமாகும்.

- Advertisement -

எல்லோருக்குமே சொந்த வீடு பாக்கியம் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது. அவரவருக்கு ஒரு கொடுப்பினை இருந்தால் தான் சொந்த வீடு அமையும் என்று நம் ஜோதிட சாஸ்திரங்கள் கூற கேட்டிருப்போம், அது உண்மைதான். பணம் இருந்து வீடு கட்ட முடியாமல் உள்ளவர்களும் உண்டு! எல்லாமே இருந்தும் பணம் இல்லாமல் இருப்பவர்களும் உண்டு. இடம் வாங்கியதோடு சரி, அதில் வீடு கட்டுவது என்பது சிலருக்கு கனவாகவே போய்விடும்.

இப்படி வீடு சார்ந்த பிரச்சனைகள் உடனே தீர்வதற்கு 48 நாட்களுக்கு தொடர்ந்து மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதிய செங்கல் வாங்கி பூஜை செய்ய வேண்டும். காசு கொடுத்து முதலில் ஐந்து புதிய செங்கல் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த செங்கல் உடையாமல், விரிசல் விழாமல் நல்ல செங்கலாக இருக்க வேண்டும். ஐந்து செங்கற்களை வீட்டில் வைத்து நன்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து சந்தன, குங்கும பொட்டிட்டு ஐந்து செங்கற்கள் மீதும் பூக்கள் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மகாலட்சுமிக்கு 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். மகாலட்சுமிக்கு நைவேத்தியம் படைக்க சக்கரை பொங்கல், புளியோதரை, லெமன் சாதம் போன்ற ஏதோ ஒன்றை உங்களால் முடிந்தவற்றை நீங்கள் வைக்கலாம். 48 நாட்கள் குங்கும அர்ச்சனையுடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த செங்கற்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜையும் செய்ய வேண்டும் இப்படி தொடர்ந்து 48 நாட்கள் முடிவதற்குள் செய்து பூஜித்து இந்த செங்கற்களை கொண்டு போய் மகாலட்சுமி உடைய ஆலயத்தில் வைத்துவிட்டு வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் பாதியில் நின்ற கட்டுமான பணிகள் மீண்டும் நடக்கும்.

இதையும் படிக்கலாமே:
தங்க நகை வீட்டில் மென்மேலும் சேருவதற்கு 108 ரூபாய் நாணயம் இருந்தால் போதுமே! அள்ள அள்ள குறையாத தங்க நகை சேர்க்கைக்கு எளிய வழிபாடு!

வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்கிற உங்களுடைய கனவு நினைவாக மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் சிலருக்கு வீடு பாழடைந்து போயிருக்கும், அவர்கள் ரெனவேஷன் செய்ய முடியாமலும் இருப்பார்கள். இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும், நீங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு மகாலட்சுமிக்கு பூஜை செய்து, செங்கற்கள் வழிபாடு செய்த பின்பு கொண்டு போய் ஆலயத்தில் வைத்து விட்டு வந்தால், நிச்சயம் நினைத்தது நிறைவேறும். இந்த 48 நாட்களில் அசைவ உணவு உண்ணாமல் விரதம் இருப்பது முக்கியமாகும். ரொம்பவே எளிய வழிபாடு தான் என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை நீங்களும் செய்து பயனடையலாமே!

- Advertisement -