யாருடைய கைகளில் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும் தெரியுமா? நீங்க இப்படி செய்தால் உங்க கையிலும் மகாலட்சுமி வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து விடுவாளாம்!

lakshmi-cash
- Advertisement -

பணம் எல்லோருடைய கைகளிலும் புழங்குவது என்பது சாத்தியமற்றது. ஒருவருடைய கைகளில் அதிகம் இருப்பதால் மற்றவர்கள் அதை பார்த்து பொறாமைப்படவும் நேர்ந்து விடுகிறது. யாருடைய கைகளில் எல்லாம் பணம் அதிகமாக புழங்கும்? மகாலட்சுமி யாருடைய கைகளில் வந்து அமர விரும்புகிறாள்? கைராசியானவர் யார்? என்கிற ரகசியத்தை தான் இந்த ஆன்மீக குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

கைராசியானவர் என்று நாம் ஒரு சிலரை குறிப்பிட்டு கூறப்படுவது உண்டு. சிலர் எப்படி கஷ்டப்பட்டு சமைத்தாலும், அவர்களுடைய சமையலில் ருசியே இருக்காது. ஆனால் சிலர் சர்வ சாதாரணமாக அபார ருசி உடைய சமையலை சட்டுனு நொடியில் செய்து அசத்தி விட்டு சென்று விடுவார்கள். இவர்களை கைராசியானவர் என்று குறிப்பிடப்படுவது உண்டு. அதே போல தத்தம் துறையில் வல்லுனர்களாக விளங்குபவர்களும், மக்களின் மனதை கவர்ந்தவர்களும் கைராசி ஆனவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுடைய கைகளில் இருந்து எதை நாம் பெற்றாலும், அது வெற்றியடையும் என்பது அனைவருடைய கருத்தாகவும் இருக்கும். இப்படிப்பட்ட கைராசி என்கிற வாக்கியத்தை பட்டமாக பெற்றவர்களின் கையில் கண்டிப்பாக மகாலட்சுமி நிரந்தரமாக கூடியிருக்கிறாள்.

- Advertisement -

ஒருவருடைய சுபாவம் எவரையும் பாதிக்காமல், தன்னை வருத்திக் கொண்டு மற்றவர்களுக்காக துன்புறுவதாக இருப்பது, குடும்பத்திற்காக உழைப்பவர்கள், நேர்மையுடன் நடப்பவர்கள் கைகளில் மகாலட்சுமி எப்பொழுதும் இருப்பார். இத்தகையவருடைய கைகளில் எப்பொழுதும் பணம் புழங்கி கொண்டே இருக்கும். ஒரு குடும்பத்தில் ஆணை விட, பெண்களின் கையிலேயே பணம் அதிகம் புழங்குகிறது, இதற்கு காரணமும் இது தான்.

ஆண் என்னதான் சம்பாதித்தாலும், பெண்ணைப் போல பொறுமையும், உழைப்பும், இரக்க குணமும் இவர்களிடம் இருப்பதில்லை. எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு குடும்பத்தை முன்னெடுத்துச் செல்லும் பெண்கள் கையில் பணம் புழங்க முதலில் எண்ணம் நல்லவையாக இருக்க வேண்டும். எல்லா பெண்களுடைய கைகளிலும் பணம் புழங்குவது கிடையாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தான் சம்பாதிப்பது மட்டும் அல்லாமல் பலருடைய சம்பாத்தியத்திற்கு காரணமாக இருப்பவருடைய கைகளில் மகாலட்சுமி எப்பொழுதும் குடியிருப்பாள். இதனால் அவர்களுடைய கைகளிலும் பணம் எப்பொழுதும் நீக்கமற புழங்கிக் கொண்டே இருக்கும். 10 பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளியிடம் பணம் இல்லாமல் இருக்குமா? தன்னுடைய சுயலாபத்துக்காக அவர் மற்றவர்களை வேலைக்கு வைத்திருந்தாலும், அவரால் மற்றவர்களுடைய குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மகாலட்சுமி எப்பொழுதும் அவர்களிடம் இருக்கிறாள். எனவே நாம் சம்பாதிப்பது மட்டும் அல்லாமல் நம்மால் பல பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தால் கொடுக்க வேண்டும். இதனால் மகாலட்சுமி நம்மை எளிதாக வந்தடைவாள்.

இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் மட்டும் அதிர்ஷ்டம் அல்ல! இந்த 1 பொருள் வாங்கினாலும் பெரும் அதிர்ஷ்டம் வருமாம் தெரியுமா?

வழிவழியாக தன் சந்ததியினருடைய நலன்களை கருதி தான தர்மங்களை செய்பவர்கள், புண்ணியங்களை சேர்ப்பவர்கள் கைகளிலும் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். இதனால் தான் பரம்பரை பரம்பரையாக சிலர் பணக்காரனாகவே இருந்து வருகின்றனர். இவர்களிடம் எத்தகைய குணம் இருந்தாலும், தீய குணங்கள் காணப்பட்டாலும் கூட அவர்களுடைய முன்னோர்கள் செய்த புண்ணியங்கள் இவர்களை வந்தடைகிறது. நாம் வலது கையால் தானம் செய்வதை இடது கை கூட அறிய கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று எல்லாவற்றையும் பப்ளிசிட்டியாக தம்பட்டை அடித்துக் கொண்டு செய்து வருகின்றனர். இத்தகையர்களிடம் பணம் நிலைப்பதில்லை ஆனால் செய்த காரியத்தில் பயனை எதிர்பாராமல் செய்பவர்களிடம் பணம் புழங்கும். பணத்தை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள், நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதை மற்றவர்களுக்கு மனதார தானம் செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கைகளிலும் விரைவில் பணம் புழங்குவது நிச்சயம்.

- Advertisement -