வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக வழிமுறைகள்

poojai
- Advertisement -

கடின உழைப்பு இருந்தால் மட்டுமே அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும். தெளிவான மதி இருந்தால் மட்டுமே சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க முடியும். இவை ஒரு புறம் இருக்க கையில் வந்த பணம் சிறிதளவும் தங்காமல் முழுவதுமாக செலவாகிவிடும். இவை அனைத்தும் பலருக்கும் இருக்கின்ற ஒரு பிரச்சனை தான். இவற்றையெல்லாம் சிறுசிறு ஆன்மீக விஷயங்களை நமது வீட்டில் முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நம் அன்றாட வாழ்வில் பொதுவாக செய்யக் கூடிய விஷயங்களை ஆன்மீக விதியின்படி சரி எது, தவறு எது என்று தெரிந்து கொண்டு அவற்றை மாற்றிக் கொண்டாலே போதும். வீட்டில் பணம் தங்குதடையின்றி வந்து கொண்டிருக்கும். வாருங்கள் அவ்வாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்களை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

Govt job

நம் கையில் வந்த பணத்தை கவனமாக கையாள வேண்டும். அவற்றை எந்த செலவுகள் செய்கின்றோம் என்று யோசித்து செய்ய வேண்டும். அது போல பணப்பரிமாற்றம் செய்கின்ற வேலையில் அடர் வண்ண நிறத்தில் ஆடைகள் அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமான பண பரிவர்த்தனைகள் செய்யும் போது வெளிர் நிற ஆடைகளை அணிந்து கொள்வது மிகவும் சிறந்ததாக அமையும்.

- Advertisement -

இரவில் தூங்கும் பொழுது வடக்கு திசை நோக்கி தலைவைத்து தூங்கினோம் என்றால் பணவிரயம் ஏற்படும். எனவே மேற்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தோம் என்றால் பண வரவு அதிகரிக்கும்.

sleep1

பூஜை அறையில் சிலர் சுவாமி சிலைகள் வைத்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இரண்டிற்கு மேற்பட்ட சிலைகள் இருந்து அவற்றை எதிரெதிர் திசையில் வைத்திருந்தால் வீட்டில் பணப் புழக்கம் குறைய ஆரம்பிக்கும். எனவே சிலைகளை எதிரெதிர் திசையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அது போல உடைந்த சிலைகள், சுவாமி படங்கள் வீட்டில் இருந்தால் அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

- Advertisement -

வீட்டில் ஓடாத கடிகாரங்கள் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் அவற்றை தூக்கி எறிய வேண்டும். அவ்வாறு கிழக்கு, மேற்கு, வடக்கு திசை நோக்கி மட்டுமே கடிகாரத்தை மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் .ஆனால் தவறியும் தெற்கு திசை நோக்கி கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. இது பணப்புழக்கத்தை குறைக்கும்.

wall clock

ஒவ்வொரு வீட்டிலும் சதுர வடிவ அல்லது செவ்வக வடிவ கண்ணாடி இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அதைவிட 5 அடிக்குமேல் கண்ணாடி இருப்பதும் அது வடக்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் மகாலட்சுமி தாயாருக்கு தாமரை, தேன், தானியம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து பூஜிப்பது நமது வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

chappathi-kalli

வீட்டின் முன் புறத்திலும் பின்புறத்திலும் முட்கள் நிறைந்த செடிகளை வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு காய்ந்த செடிகளையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் வீட்டின் முன்புறம் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -