செல்லும் இடமெல்லாம் அவமானம், விரக்தி, தோல்வி, பணத்தடை, வீண் விரயம், கடன் இவை அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் விரட்டி அடிக்க கொஞ்சம் மிளகு உங்களிடம் இருந்தால் போதும்.

- Advertisement -

ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பணம் மட்டும் சம்பாதித்தால் போதாது. அவன் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ வேண்டும். அவனை துச்சமாக நினைப்பவர்கள் முன்பு நல்ல முறையில் வாழ்வது மிகவும் அவசியம். இத்துடன் கடன் இல்லாமல் பணவரவு அதிகரித்து பணம் வீண்விரையும் ஆகாமல் சேமித்து செல்வந்தராய் வாழ வேண்டும். இவையெல்லாம் அமைந்தால் மட்டுமே ஒருவர் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான எளிய பரிகார முறையை பற்றி தான் இப்பொழுது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முதலில் இந்த பரிகாரத்தை எந்தெந்த செயலுக்காக செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவர் எங்கு சென்றாலும் அவருக்கு அவமானங்களை ஏற்படுகிறது. யாரும் அவரை மதிக்கவில்லை சமூகத்தில் தனக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை என நினைப்பவர்கள், எதைத் தொட்டாலும் தோல்வியில் முடிகிறது என நினைப்பவர்கள், அடுத்து வாழ்க்கையில் எப்பொழுதும் விரக்தி அடைந்து எதிர்மறையாகவே சிந்தித்து கொண்டு இருப்பவர்களும் இதை செய்யலாம்.

- Advertisement -

இத்துடன் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதை காட்டிலும் சம்பாதித்த பணத்தை சரியான முறையில் செலவழிப்பது தான் சிறந்தது. பணம் கையில் வந்ததும் வேண்டாத செலவுகள் எல்லாம் செய்த பிறகு எதற்கு செய்தோம் என்று சிலர் வருந்துவார்கள். அதற்கும் ஒரு சில தடைகளை காரணம் என்று சொல்லப்படுகிறது. அது போன்ற தடைகளையும் நீக்கி நம்முடைய எண்ணங்கள் தெளிவாகி நல்ல முறையில் சம்பாதிக்கவும் சம்பாதித்த பணத்தை விரயம் இல்லாமல் சேர்க்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

பண விரயத்தை தடுத்து பண வரவு தாராளமாக பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கைப்பிடி அளவு கருமிளகு, கொஞ்சம் குண்டு மஞ்சள் கைப்பிடி அளவு தர்ப்பையை சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்து ஒரு மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் மஞ்சள் எப்போதும் மங்களத்தை குறிக்கும். இது இருக்கும் இடத்தில் எல்லாம் சுபிட்சமாகவே இருக்கும். கருமிளகு என்பது கரு மூளிகை என்றும் சிவனின் கண் என்பன போன்ற அதிசக்திகளை கொண்டது. தர்ப்பையானது அனைத்து தீய சக்திகளையும் தன்னுள் கிரகித்து நல்ல ஆற்றலை வெளிப்படுத்தும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த பரிகார மூட்டையை உங்களின் தேவையை பொறுத்து அது போல பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணம் பெருக வேண்டும் வீண்விரையம் ஆக கூடாது என நினைப்பவர்கள் பணம் வைக்கும் இடத்தில் இதை வைத்துக் கொள்ளலாம். இதை வீடு வியாபார ஸ்தலம் என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

எப்பொழுதும் நல்ல சிந்தனையுடன் நல்ல முறையில் செயல்கள் இருக்க வேண்டும் அனைவரும் நம் செயலை பார்த்து வியக்க வேண்டும் அனைவரின் நல் மதிப்பையும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இதை எப்போதும் தங்கள் கையிலே இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றி தொழில் நிமித்தமாகவோ அல்லது வியாபாரம் நிமித்தமாகவோ யாரேனும் சந்திக்கும் போது அந்த காரியம் சித்தி அடைய வேண்டும் என்றாலும் இந்த பரிகார மூட்டை கையில் வைத்திருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யத்தை தரும் வெற்றிலை கொடியில் 5 ரூபாயை இப்படி செய்தால் செல்வம் கொழிக்குமாம்!

இவை அனைத்திலும் விட இந்த பரிகார மூட்டையை பூஜையறையில் வைக்கும் போது பண விரயம் மட்டுமின்றி ஒரு வீட்டில் இழப்பு ஏற்பட்டாலும் அதுவும் விரைய கணக்கில் தான் சேரும். அது போன்ற இழப்புகளை கூட தடுக்கும் ஆற்றல் இந்த பரிகார மூட்டைக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -