ஐஸ்வர்யத்தை தரும் வெற்றிலை கொடியில் 5 ரூபாயை இப்படி செய்தால் செல்வம் கொழிக்குமாம்!

- Advertisement -

வீட்டில் வெற்றிலை கொடி வைத்திருப்பவர்கள் செல்வம் நிறைய இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வெற்றிலை கொடி மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த வெற்றிலை கொடி வீட்டில் இருப்பது மகாலட்சுமியை தங்க வைப்பதற்கு சமமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வெற்றிலை கொடி நமக்கு எப்படி செல்வத்தை பெருக செய்யும்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெற்றிலை கொடி வீட்டில் வளர்ப்பது ரொம்பவே நல்ல விஷயம் தான் என்றாலும், அதை தனியாக ஒற்றைக் கொடியாக வளர்ப்பது வம்ச விருத்தியை தடை செய்யும் என்றும் கூறப்படுகிறது. வெற்றிலை கொடி ஆண் வகையை சார்ந்தது என்று கருதப்படுகிறது. எனவே இதை தனியாக வளர்த்தால் வம்சத்தில் விருத்தி உண்டாகாது எனவே கூடவே ஏதாவது ஒரு செடியையும் சேர்த்து வளர்ப்பது நல்லது.

- Advertisement -

இப்படி வளர்க்கப்படும் வெற்றிலை கொடி நிலம் அல்லது தொட்டியில் வைத்து நீங்கள் வளர்க்கலாம். வெற்றிலை கொடியை சுற்றிலும் இருக்கும் களைகளை அவ்வப்பொழுது அகற்றி எறியுங்கள். மண்ணிலிருந்து ஒரு அரை அடி கொடியை காம்பாக அப்படியே விட்டு விடுங்கள். இலைகள் இருந்தால் அதை கிள்ளி எறியுங்கள். இந்த காம்பு பகுதியில் மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள்.

மஞ்சள் தடவிய காம்பு பகுதியில் மகாலட்சுமியின் குங்குமத்தை வையுங்கள். இப்படி அலங்கரித்த பிறகு மண்ணை சுற்றிலும் நன்கு கிளறி விடுங்கள். வேலை சுற்றிலும் இருக்கும் மண் பகுதியில் நல்ல ஒரு ஆக்சிஜன் கிடைக்கும் பொழுது தான் செடிகள் செழிப்பாக வளரும். எனவே மண்ணை இறுக்கமாக இல்லாமல் எப்பொழுதும் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஐந்து ரூபாய் நாணயம் அல்லது ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயங்களை வெற்றிலை கொடி வைத்திருக்கும் மண்ணை சுற்றிலும் தோண்டி புதைத்து வையுங்கள்.

- Advertisement -

பின்னர் இதற்கு தினம் தோறும் தண்ணீர் ஊற்றி வாருங்கள். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது வீட்டில் செடி எந்த அளவிற்கு செழிப்பாக வளர்கிறதோ, அந்த அளவிற்கு செல்வங்களும் செழிப்பாக வளரும் என்பது நம்பிக்கை. இந்த ஒரு எளிய பரிகாரத்தை நீங்கள் பௌர்ணமியில் அல்லது பௌர்ணமியை அடுத்து இருக்கின்ற வளர்பிறை நாட்களில் மட்டுமே செய்ய வேண்டும். வளர்பிறையில் செய்யும் பொழுது தான் செல்வங்களும் வளரும் என்பது ஐதீகம். அது போல சூரியன் இருக்கும் பொழுது தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பின்னரோ அல்லது உதிக்கும் முன்னரே செய்யக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
17/07/2023 அமாவாசையோடு வரும் ஆடி முதல் நாள்! நிலை வாசலில் இதை மட்டும் செய்தால் கடன் தீர்ந்து பணம் பெருகும் தெரியுமா?

இந்த நாணயங்களை மாதம் ஒருமுறை வளர்பிறை நாட்களில் நீங்கள் புதிதாக மாற்றி வைக்கலாம். மண்ணில் இருந்து தோண்டி எடுத்த நாணயங்களை கழுவி சுத்தம் செய்து அதை நீங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை கொடிக்கு நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க கூடிய சக்தி உண்டு. இது எதிர்மறை சக்திகளை விலகி ஓட செய்யும். வெற்றிலை கொடி இருக்கும் இடங்களில் பில்லி, சூனியம், ஏவல் பலிக்காது என்றும் கூறுவது உண்டு. இது போல இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த வெற்றிலை கொடியை நீங்கள் புதிதாக நடுவதாக இருந்தாலும் வளர்பிறை நாட்களில் நட்டு வைத்து வளருங்கள், செழித்து வளரும்.

- Advertisement -