பணத்தை இரண்டு மடங்கு அதிகமாக சேமிக்க தாந்திரீக பரிகாரம்.

mayil-iragu
- Advertisement -

ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. அந்த 500 ரூபாயை எப்படி செலவு செய்யப் போகின்றோம். அந்த 500 ரூபாயை எப்படி இரட்டிப்பாக மாற்றப் போகின்றோம் என்பதில் தான் சூட்சமமே அடங்கி இருக்கிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்தாலும், அதை திறமையாக சேமிக்க வழிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த பணத்தை திறமையாக இரட்டிப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் எளிதில் நாம் பணக்காரராக மாற முடியும். இதற்கு புத்திசாலித்தனம் ரொம்ப ரொம்ப முக்கியம். புத்திசாலித்தனத்தோடு திறமையாக நீங்கள் செயல்பட்டால் சீக்கிரம் பணத்தை இரட்டிப்பாக பெருக்க முடியும். அதற்காக எக்காரணத்தை கொண்டும் பேராசைப்படாதீங்க.

- Advertisement -

பேராசை பட்டால் பெரு நஷ்டம் ஏற்பட்டுவிடும். அதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர அதிர்ஷ்டமும் நமக்கு கை கொடுக்க வேண்டும் அல்லவா. அந்த அதிர்ஷ்டத்தை நாம் பெறுவதற்கு ஆன்மீகத்தில், தாந்திரீக ரீதியாக ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. பணத்தை இரட்டிப்பாக்க அதிர்ஷ்ட காற்றை நம் பக்கம் வீசவைக்க என்ன வழி இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் ஆன்மீகம் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

பணத்தை இரட்டிப்பாக பெருக்க செய்ய வேண்டிய பரிகாரம்

ரொம்ப ரொம்ப சுலபமான பரிகாரம் இது. இந்த சூட்சமமான பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் 2 மயில் இறகு. மயில்கண் அழகாக தெரியும் படி இருக்கக்கூடிய மயில் இறகு. ஒரு நோட்டுப் புத்தகம் அல்லது புத்தகம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -

இதற்கு டைரி பயன்படுத்தலாம். அல்லது ஆன்மீகம் புத்தகங்கள் பயன்படுத்தலாம், அல்லது பிள்ளைகள் படிக்கக்கூடிய புத்தகங்களை கூட இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாக மடித்து சரியாக மயில் கண் இருக்ககூடிய இடத்தில் வைத்து விடுங்கள்.

அந்த நோட்டுக்கு மேலே மீண்டும் ஒரு மயில் இறகை வைத்து, அதை அப்படியே நோட்டு புத்தகத்தில் வைத்து விடுங்கள். பரிகாரம் முடிந்தது. பணம் இரட்டிப்பாக வேண்டும். 500 ரூபாய், ஆயிரம் ரூபாயாக பெருக வேண்டும் என்று நினைத்து, ஒரு 500 ரூபாய் நோட்டை, இரண்டு மயில் கண்களுக்கு இடையே வைத்து, நோட்டு புத்தகத்துக்கு நடுவில் வைத்து மடித்து அலமாரியில் வைத்து விட்டால் போதும்.

- Advertisement -

உங்கள் கையில் பல மடங்கு பணம் சேர தொடங்கிவிடும். நாம் வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்கு முன்பக்கமும் மயிலிறகு, பின்பக்கமும் மயிலிறகு. அவ்வளவுதான். இரண்டு மயில் இறகுகளுக்கு நடுவே ரூபாய் நோட்டு. புரிந்ததா. ஒரு 500 ரூபாயை இப்படி வைத்து தான் பாருங்களேன். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் என்ன மாற்றம் தெரிகிறது என்பது ஒரு வாரத்தில் உங்களுக்கு தெரியும்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் தெய்வங்கள் உயிர் பெற பொட்டு வைக்கும் முறை

கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வருமானத்தை பெருக்க நல்ல வழிகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். நிறைய பணத்தை சேமிக்க தொடங்கி விடுவீர்கள். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். மயில் இறகுக்கு அத்தனை பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது. நம்பிக்கை மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கு மூலதனம். நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வது பலன் தராது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -