பண தடை நீங்கி, தொழிலில் முன்னேறி, முதல் இடத்தை அடைய வேண்டுமானால் இந்த பொருட்களை எரித்து விடுங்கள் போதும். உங்கள் வளர்ச்சியை பார்த்து நீங்களே வியந்து போவீர்கள்.

- Advertisement -

பணத் தேவை என்பது இல்லாத மனிதர்களே கிடையாது. தேவை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுமே அன்றி தேவை நிச்சயமாக இருக்கும். ஒரு நாளுக்கு நூறு ரூபாய் இருந்தால் போதும் வாழ்ந்து விடுவேன் என்று கூறுபவர்களும் உண்டு, ஆயிரம் ரூபாய் இருந்தாலும் இது என் தேவைக்கு பத்தாது என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் தேவை அனைவருக்கும் இருக்கும். இது மட்டும் தான் பண தேவைகான பொதுவான கருத்து. அப்படி நம் தேவைக்கான பணம் நமக்கு தடை இல்லாமல் கிடைக்க ஒரு சில விஷயங்களை செய்தால், நமக்கு வர வேண்டிய பணம் தடையில்லாமல் நம்மை வந்து சேர சேரும். அப்படி ஒரு எளிய பரிகாரத்தை பற்றிய பதிவு தான் இது.

உதாரணமாக ஏதாவது ஒரு தொழிலை எடுத்து கொள்ளுங்கள். பலர் அந்த தொழில் செய்தாலும், யாரோ ஒருவர் மட்டும் தான் முன்னுக்கு வருவார். அப்படி என்றால் தொழிலில் தவறு இல்லை என்று தானே அர்த்தம். அப்படியானால் ஒருவர் மட்டும் முன்னுக்கு வர என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தால் இப்போது நாம் படிக்கும் இந்த பதிவிற்கான விளக்கம் கிடைத்து விடும்.

- Advertisement -

முதலில் இந்த பணம் நம்மிடம் வருவதற்கு பணத்திற்கான ஈர்ப்பு தன்மை நம்மில் இருக்க வேண்டும். அதே தன்மை நாம் வாழும் வீட்டிலும் நிச்சயமாக இருக்க வேண்டும். அதை ஈர்க்கும் ஆற்றல் உடைய பொருள் நம் முன்னோர்கள் விட்டு சென்ற வரம் தான் இந்த வர மிளகாய்.

இதை வைத்து திருஷ்டி கழிக்கலாம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தோம். ஆனால் அதில் உள்ள அத்தனை சக்திகளையும் முன்னோர்கள் மிக மிக சாதாரணமாக இந்த முறையில் சொல்லி இருக்கிறார்கள். இப்போது நம் பணத்தை ஈர்க்க இந்த வர மிளகாயை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். அதற்கு இத்துடன் சேர்த்து இன்னும் இரண்டு பொருள்கள் நமக்கு தேவை.

- Advertisement -

அந்த இரண்டு பொருள்கள் மிளகு,வலம்புரிக்காய் இடம்புரிக்காய், இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்க கொள்ளுங்கள். இரண்டையும் வாங்கி கொண்டு அத்துடன் இந்த வர மிளகாய், மிளகு எடுத்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளிகிழமை தான் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ஒரு பவுலில் வைத்து விடுங்கள். அதே போல் வெள்ளிக்கிழமை மாலை இதே பொருட்களை எல்லாம் கொஞ்சம் உங்கள் கைகளில் எடுத்து (சுற்றி போடுவது போல) உங்களுக்கு மேலிருந்து கீழ் வரை சுற்றுப் போடும் முறையில் சுற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டில் பவுலில் உள்ள பொருட்களையும், உங்களுக்கு சுத்தி போட்ட பொருட்களையும் ஒன்றாக சேர்த்து எரித்து விடுங்கள்.

இது போதும் உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் வராமல் தடுத்துக் கொண்டிருக்கும் பணவரவை தேடி வர வைக்க. நம் முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தை காரணமும் இல்லாமல் செய்யவில்லை சாதாரணமாக அவர்கள் சுற்றி போடுவது கண் திருஷ்டி கழிப்பது என்று செய்த ஒரு பொருள் எத்தனை அற்புதம் செய்கிறது என்று இனி நீங்கள் இந்த முறையை பின்பற்றும் போது உணர்வீர்கள்.

- Advertisement -