பணத்தை அள்ளித்தரும் வெள்ளி மோதிரம், இந்த ஒன்று மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும் பணத் தட்டுப்பாடு இருக்காது

silver
- Advertisement -

வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என்றாவது நமக்கு விடியல் வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அவர்களுக்கு கஷ்டம் மட்டுமே இருந்து கொண்டிருக்கும். மூன்று வேளை உணவு சாப்பிடுவதே கேள்விக்குறியாக இருக்கும். இப்படி வாழ்வாதாரம் என்பதே நிலையானதாக இருக்க வில்லை என்றபோது, இவர்களின் வாழ்க்கை எப்படி முன்னேறும். இவ்வாறு அவர்கள் நித்தம் நித்தம் கஷ்டப்படுவதற்கு காரணம் பணம் ஒன்று தான். பணம் இருப்பவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள், பணம் இல்லாதவர்கள் இப்படி துயரப்படுகிறார்கள். எனவே பணம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே நிம்மதியும் இருக்கும் என்பது இன்றைய சமூகத்தின் கோட்பாடாகவே மாறிவிட்டது. அவ்வாறு பணத்தேவை அனைவருக்குமே இருக்கிறது. இப்படி பலருக்கும் அவசியமான இந்த பணத்தை நம்மிடம் ஈர்ப்பதற்கு இந்த ரகசிய சூட்சமத்தை தெரிந்து கொள்ளுங்கள்.வாருங்கள் அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே இந்த உண்மை புரியும். நகை கடைக்கு செல்லும் பொழுது, அங்கு தங்க நகை வாங்குவதற்காக நீங்கள் சென்றிருப்பீர்கள். ஆனால் அந்த கடை உரிமையாளரை சற்று உற்று நோக்குங்கள், அவரது விரலில் தங்க மோதிரம் அணிந்து இருந்தாலும், நிச்சயமாக ஒரே ஒரு வெள்ளி மோதிரமாவது அணிந்திருப்பார்.

- Advertisement -

அதேபோல் லட்சாதிபதியாக இருந்தாலும், கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்களின் விரலில் அவசியம் ஒரு வெள்ளி மோதிரம் இருக்கும். அவர்களிடம் மோதிரம் வாங்குவதற்கு பணம் இல்லாமலா வெள்ளி மோதிரம் வாங்குகின்றனர். இல்லை, இதற்கு ஒரு காரணம் உண்டு. பொதுவாகவே வெள்ளிக்கு பணத்தை ஈர்க்கும் திறன் இருக்கிறது. இவ்வாறு வெள்ளி மோதிரம் அணிந்து இருப்பவர்கள் கையில் பணத்தட்டுப்பாடு என்பதே இருக்காது.

ஒரு சிறிய வெள்ளிக் கம்பியை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிய இரும்பு கம்பியை சுற்றி கொள்ள வேண்டும். பின்னர் இதனை பீரோவில் பணம் வைக்கும் டப்பாவின் மீதோ, அல்லது பணத்தின் மீதோ வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது பணம் தடையில்லாமல் உங்கள் கையில் வந்து சேரும்.

- Advertisement -

வெள்ளி உடலில் இருப்பதனால் உடல்சூட்டை தணிக்கிறது, அதுமட்டுமில்லாமல் எதிர்மறை சக்திகளை உங்களிடம் நெருங்க விடாமல் இருக்கும். எப்பொழுதும் உங்களிடமிருந்து நேர்மறை அதிர்வுகள் மட்டுமே வெளியாகும். இப்படி உங்களை சுற்றி அனைத்தும் நேர்மறையாக இருந்தது என்றால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இதிலும் முக்கியமாக நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. எப்பொழுதும் பூஜை அறையில் இரும்பு உலோகத்தினாலான எந்த பொருளும் இருக்கக் கூடாது. இவ்வாறு இரும்பு ஸ்டாண்,ட் இரும்பு தட்டு என்று எதையாவது உபயோகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நிச்சயம் அங்கு தெய்வம் வராது. எனவே இரும்பு உலகத்தை பயன்படுத்தக் கூடாது. அப்படி இரும்பினை அகற்ற முடியாமல் இருந்தால் அதில் ஒரு சிறிய வெள்ளிக் கம்பியை சுற்றி கொள்ளுங்கள். அப்பொழுது எதிர்மறை சக்தி குறைந்து, நேர்மறையாக மாறிவிடும்.

- Advertisement -