பூஜை அறையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுங்கள். கண்ணுக்கே தெரியாத இந்த பொருளால் கணக்கில்லாமல் பணம் குவியும்.

pooja room money
- Advertisement -

பணத்தை சம்பாதிக்க நாம் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி சம்பாதித்தால் மட்டும் நம்மிடம் பணம் தங்கி விடுகிறது என்ன? எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் செலவழிந்து கொண்டே தான் இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் தேவை இல்லாமல் வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே கையில் பணம் சேரும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. சம்பாதித்த பணம் வீட்டிற்கு வருவதற்கு உள்ளே செலவழிந்து விடுகிறது. அப்படி ஆகாமல் பணம் பல வழிகளில் நமக்கு வந்து கொண்டே இருக்கவும், வந்த பணம் கைகளில் தங்கி பன்மடங்கு பெருகவும் கல் உப்பை வைத்து பூஜை அறையில் ஒரு சிறிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சம்பாதித்த பணம் பல மடங்காக பெருக:
இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை செய்வதற்கு நமக்கு ஒரு சிறிய மண் குடுவை, அதே போல் நாட்டு மருந்து கடைகளில் வசம்பு கிடைக்கும் அதில் ஒரே ஒரு துண்டை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இவை இரண்டும் மட்டும் தான் பரிகாரத்திற்கு நாம் வாங்க வேண்டிய பொருட்கள்.

இந்த பரிகாரம் செய்யும் நாளன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜையறையில் மகாலட்சுமி தாயார் முன் நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த சிறிய மண் குடுவையில் கொஞ்சமாக கல் உப்பை போட்டு அதில் இந்த வசம்பை வைத்து மேலே மீண்டும் கல்லுப்பை போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த பானையை சுற்றிலும் 520741 என்ற இந்த ஏஞ்சல் எண்ணை எழுத வேண்டும். இதை எழுதிய பிறகு இந்த பானைக்கு கற்பூர தீபாராதனை காட்டி நம்முடைய குலதெய்வம் இஷ்ட தெய்வங்களை மனதார வேண்டி பணம் உங்களுக்கு தாராளமாக வர வேண்டும் என்றும் வந்த பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் வேண்டி கொள்ளுங்கள்.

இவையெல்லாம் செய்த பிறகு இந்த பானையை உங்கள் பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்திற்கு பின்னால் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். இது மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டும் எடுத்து மாற்றினால் போதும். இதற்கிடையில் இதை எடுத்து பார்க்கக் கூடாது. அப்படி மாற்றும் பொழுது இதில் இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட்டு மீண்டும் புதிதாக கல்லுப்பையும் வசம்பையும் சேர்த்து இதே போல் பூஜை செய்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய இந்த கல் உப்பு, வசம்பு இவை எல்லாம் பணத்தை ஈர்க்கும் தன்மையும் பணத்தை தக்கவைக்கும் தன்மையும் கொண்டவை. அத்துடன் அதில் எழுதும் ஏஞ்சல் எண்ணாது பணத்தை பல மடங்கு பெருக்கி நம்மிடமிருந்து சென்ற பணம் மறுபடியும் நமக்கு பெருகிப் பெற வழி செய்யும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளோடு சுக்கிர பார்வையும் உங்கள் மீது பட வெறும் ஆறு ஏலக்காய் போதும். அப்புறம் பாருங்க சுக்கிர திசை அடிக்க துவங்கி பண மழையில நனைய ஆரம்பிச்சிடுவீங்க.

இந்த இரண்டையும் ஒரு சேர செய்யும் போது நம்முடைய வீண் விரயங்கள் குறைவதோடு, பணவரவும் அதிகரித்து கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உங்களின் வறுமை நிலையும் மாறி நல்ல பணவரத்து வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -