மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளோடு சுக்கிர பார்வையும் உங்கள் மீது பட வெறும் ஆறு ஏலக்காய் போதும். அப்புறம் பாருங்க சுக்கிர திசை அடிக்க துவங்கி பண மழையில நனைய ஆரம்பிச்சிடுவீங்க.

mahalshmi elekkai panam
- Advertisement -

செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தோடு சுக்கிர பார்வையும் கிடைக்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் சுக்கிர திசை அடைந்து விட்டால் அவர்களே வேண்டாம் என்று தடுத்தாலும் அவர்களின் முன்னேற்றத்தை தடை போடவே முடியாது. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளையும் சுக்கிரனுடைய பரிபூரண ஆசியும் பெற இந்த ஏலக்காய் பரிகாரம் உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அதை எப்படி என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பண வரவு தாராளமாக செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் அதுமட்டுமின்றி அது சுக்கிர பகவானுக்கும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இப்பேற்பட்ட நாளில் நம்முடைய வறுமை நிலை மாறி வாழ்க்கையில் பணவரவு தாராளமாக இந்த எளிய ஏலக்காய் பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு நல்ல தரமான 6 ஏலக்காய் மட்டும் இருந்தால் போதும். ஆறு என்ற எண்ணிக்கை சுக்கிர பகவானுக்கு உரியது, ஏலக்காய் மகாலட்சுமி தாயார் உகந்தது இந்த இருவருக்கும் உகந்த நாளில் இருவருக்கும் உகந்த பொருளை வைத்து செய்யும் இந்த பரிகாரம் பல மடங்கு பலனை கொடுக்கும்.

நீங்கள் எடுத்து இருக்கும் இந்த ஆறு ஏலக்காயில் 2 ஏலக்காய் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளிக்கும் முன்பு தண்ணீரில் சிறிது நேரம் அந்த ஏலக்காய் ஊற வைத்த பின் அந்த தண்ணீரில் குளித்து விடுங்கள். அதன் பிறகு மீதம் இருக்கும் நான்கு ஏலக்காவை ஒரு சிறிய எடுத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி ஒரு சிறிய பூஜையை செய்து விடுங்கள்.

- Advertisement -

பூஜை முடிந்த பிறகு அதில் இருந்து இரண்டு ஏலக்காயை மட்டும் எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது உங்கள் மணி பர்ஸ்சிலோ வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கணவர் மட்டும் தான் சம்பாதிக்கிறார் என்றால் அவரிடம் கொடுத்து அவருடைய பஸ்ஸில் இந்த இரண்டு ஏலக்காயை வைத்து கொள்ள சொல்லுங்கள். மீதம் இருக்கும் இரண்டு ஏலக்காய் மகாலட்சுமி தாயாரின் பாதத்திலே அப்படியே இருக்கட்டும். நீங்கள் பூஜை செய்யும் போதெல்லாம் இந்த ஏலக்காய்க்கு ஊதுபத்தி மட்டும் காட்டினால் போதும்.

அடுத்த வெள்ளிக்கிழமை அன்று இந்த இரண்டு ஏலக்காயும் மகாலட்சுமி தாயாரிடம் உள்ள அந்த இரண்டு ஏலக்காயும் எடுத்து போட்டு விடுங்கள். மீண்டும் இதே போன்று ஆறு ஏலக்காயை கொண்டு இதே போல செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து நீங்கள் செய்து வரும் போது உங்களுக்கு இந்த இருவரின் அனுகிரகமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். உங்களுடைய வாழ்வாதாரம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதை உங்களால் கண்கூட காண முடியும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பேர், புகழ், பதவி, அந்தஸ்து, செல்வம், யோகம் என அனைத்தையும் பெற இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த மந்திரம்.

இந்த ஏலக்காய் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து தாயாரின் அனுகிரகத்தையும் சுக்கிர பகவானின் ஆசியும் பெற்று நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம் எந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்யலாம்.

- Advertisement -