இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றினால் மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் உடனடியாக கிடைத்து விடும். ஒருமுறை ஏற்றிப் பாருங்கள் நினைத்த காரியம் உடனே நடக்கும்.

mahalakshmi
- Advertisement -

இந்த விளக்கை ஏற்றிய பின்பு பலனை அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரை காத்திருந்து தான் அடைய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்று உங்கள் மனதில் நீங்கள் முடிவு செய்து விட்டாலே, உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று தான் அர்த்தம். மகாலட்சுமிக்கு அவ்வளவு விருப்பமான, மகாலட்சுமி அம்சத்தை பொருந்திய, மகாலட்சுமியே குடி கொண்டிருக்க கூடிய அப்பேற்பட்ட அந்த விளக்கு எந்த விளக்கு என்று உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. வாங்க பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம். சில பேருக்கு இந்த விளக்கை பற்றி தெரிந்து இருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் பலனடைய இந்த குறிப்பு.

எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இந்த விளக்கு கிடைக்கும். பஞ்சகவ்ய விளக்கு. பசுவிலிருந்து எடுக்கப்பட்ட ஐந்து பொருட்கள் சேர்த்து செய்யப்பட்ட விளக்கு தான் இந்த பஞ்சகவ்ய விளக்கு. சாணம், பால், தயிர், கோமியம், நெய் இந்த ஐந்து பொருட்களின் சங்கமம் பஞ்சகவ்ய விளக்கு. இந்த ஐந்து பொருட்களும் எடுக்கக்கூடிய இடம் அதாவது இந்த ஐந்து பொருட்களும் கிடைக்கக்கூடியது எதிலிருந்து. பசுவிலிருந்து, பசு லட்சுமி அம்சம் பொருந்தியது.

- Advertisement -

இந்த விளக்கு நம் வீட்டிற்குள் வந்தாலே மகாலட்சுமி வந்தது போல தானே அர்த்தம். சரி இந்த விளக்கை எப்படி ஏற்றுவது? வெள்ளிக்கிழமை அன்று இந்த விளக்கை காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் ஏற்றலாம். தினம்தோறும் உங்களால் இந்த விளக்கை ஏற்ற முடியும் என்றால் தினமும் இந்த விளக்கு ஏற்றுவதில் தவறு கிடையாது.

இந்த விளக்கை ஏற்றினால் வீட்டில் ஒரு யாகம் வளர்த்த பலனை நாம் முழுமையாக பெற முடியும். ஒரு சிறிய பித்தளை தட்டின் மேல் இந்த விளக்கை வைத்துவிட்டு கொஞ்சமாக நெய் ஊற்றி திரி போட்டு விளக்காக இதை நீங்கள் ஏற்றும்போது, விளக்கு திரி சிறிது நேரம் எரியும். அதேசமயம் சிறிது நேரத்தில் இந்த விளக்கும் கூடவே சேர்ந்து தீ பிடித்து எரிந்து கொள்ளும். அந்த விளக்கு முழுவதும் எரியும்போது ஒருவிதமான புகை வெளிவரும் அல்லவா. அந்த புகையை கொண்டு போய் அப்படியே உங்களுடைய வீடு முழுவதும் காண்பியுங்கள். வீட்டில் இருக்கும் பீடை விளக்கும். கெட்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும். மகாலட்சுமி அம்சம் வீட்டில் நிறைவாக அமரும்.

- Advertisement -

முயற்சி செய்து பாருங்கள். பஞ்சகவ்ய விளக்கு பூஜை முறை வீட்டில் மன நிம்மதியை சந்தோஷத்தை சுபீட்சத்தை லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமே கிடையாது. இந்த பஞ்ச காவ்ய விளக்கு எரிந்து முடிந்த சாம்பல் இருக்கும் அல்லவா, அந்த சாம்பலை டப்பாவில் போட்டு தினமும் நெற்றியில் விபூதி போல பூசிக் கொண்டாலும் நமக்கு நிறைய நல்லது நடக்கும்.

ஏதோ ஒரு பண கஷ்டம். கடன் வாங்க போறீங்க. அல்லது கடன் கொடுக்க போறீங்க. அந்தப் பண பரிவர்த்தனை சரியாக நடக்க வேண்டும் என்றாலும் இந்த சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு போங்க. மகாலட்சுமி உங்க கடனை துணையாக வருவாள். குடும்பத்தில் நல்லதே நடக்கும் என்ற இந்த கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -