நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை கலந்து குளித்து விட்டால் போதும். செய்வினையால் வரக்கூடிய தீவினை எல்லாம் செயலிழக்கும்.

bathing
- Advertisement -

நம்முடைய வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பத்திற்கும் காரணம் எதிர்மறை ஆற்றலும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் தான். இந்த எதிர்மறை ஆற்றல் என்பது பல வகைகளில் நம்மை வந்து சேரும். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி, அடுத்தவர்கள் நமக்கு வைக்கக்கூடிய செய்வினை, ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் இவைகள் எல்லாமே ஒரு விதத்தில் நமக்கு கெடுதல் செய்யக் கூடியவை தான். எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் சரி, அவனுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் வீழ்ச்சி நிச்சயம். இதனால்தான் அந்த காலத்திலேயே மன்னர்கள் திறமை வாய்ந்த ஜோதிடர்களை தங்களுடைய பக்கத்திலேயே வைத்துக்கொண்டு கெட்ட நேரம் வரும்போது அதை சமாளிக்க முன்கூட்டியே என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.

இதனடிப்படையில் அந்த காலத்தில் நம் முன்னோர்களால் செய்யப்பட்டு வந்த ஒரு பழமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே நமக்கு எந்த தோஷமாக இருந்தாலும் அது விலகுவதற்கு கோ வழிபாடு சிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. கோ பூஜை செய்வது, கோ சாலைக்கு சென்று அங்கு உள்ள பசுமாட்டிற்கு தீவனம் வாங்கி கொடுப்பது, கோசாலையை வலம் வருவது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தாலே கண்ணுக்குத் தெரியாத எந்த தோஷமும் நம்மை அண்டாது என்று சொல்லுவார்கள். எதுவுமே முடியவில்லையா, ரோட்டில் ஒரு பசுமாட்டை பார்த்தால் அதை தொட்டு வணங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள். மாடு முட்டி விடப்போகிறது.

- Advertisement -

அடுத்ததாக இந்த கோசாலையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பொருட்கள் தான் பஞ்சகவ்ய விளக்கு, பஞ்சகவ்ய தீர்த்தம். இது இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கின்றது. அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பஞ்சகவ்ய தண்ணீரை நான் குளிக்கும் தண்ணீரோடு கலந்து குளிக்க வேண்டும்.

குளிப்பதற்கு முன்பாக கொஞ்சமாக பஞ்சகவ்ய தீர்த்தத்தை எடுத்து உங்களுடைய உச்சந்தலையில் சிறிதளவு வைத்துக்கொள்ளுங்கள். லேசாக தொப்புளை சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உள்ளங் கால்களில் தடவி கொள்ளுங்கள். இந்த மூன்று இடங்களிலும் பஞ்சகவ்ய நீரை தடவிக் கொண்டு ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு குளிக்கின்ற தண்ணீரில் இரண்டு மூடி பஞ்சகவ்ய தீர்த்தத்தை ஊற்றி அந்த நீரில் தலைக்கு குளித்து விட வேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரில் ஒரு முறை குளித்துக் கொள்ளலாம். இப்படி இந்த பஞ்சகவ்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யும்போது நமக்கு செய்வினை கோளாறு இருந்தாலும் சரி, கிரக சூழ்நிலைகளால் தோஷங்கள் இருந்தாலும் சரி, அதன் மூலம் பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த தீர்த்தத்தை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுவதன் மூலம் வீட்டை பிடித்த தரித்திரம் விலகும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். இதே போல தான் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஞ்சகவ்ய விளக்கை வாங்கி வீட்டில் எரிய விடுவது சிறப்பான பலனை கொடுக்கும். பஞ்சகவ்ய விளக்கு முழுவதும் அப்படியே நெருப்பு மூட்டி எரிய விட்டு விடவேண்டும்.

இந்த புகை ஒரு யாகம் வளர்ப்பதற்கு சமமான புகையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த புகையை வீடு முழுவதும் பரவினால் வீட்டில் சுபிட்சம் நிலவும். நம்பிக்கையுள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நல்ல பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -