தினமும் இந்த தீபத்தை இப்படி ஏற்ற வாழ்க்கையில் உங்களை வெல்ல யாராலும் முடியாது! கடன் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கவும் செய்யுமாம். அது என்ன விளக்கு?

mahalakshmi-panja-kavya-villakku
- Advertisement -

குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்க செய்யக்கூடிய இந்த அற்புத விளக்கை பஞ்ச கவ்ய விளக்கு என்று கூறுவார்கள். பசு மாட்டில் இருந்து பெறக்கூடிய ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டது தான் இந்த பஞ்ச கவ்ய விளக்கு. பஞ்ச கவ்ய விளக்கு என்றால் என்ன? அதனை தினமும் எப்படி ஏற்றுவது மிகுந்த பலன்களை கொடுக்கும்? வாழ்க்கையில் ஏற்றம் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

panjakavya-vilakku0

பஞ்சகவ்ய விளக்கு பசும்பால், பசுந்தயிர், பசுஞ்சாணம், பசுநெய், பசுகோமியம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு நன்கு காய வைத்து தயாரிக்கப்படும் ஒரு விளக்கு ஆகும். இந்த விளக்கு இணையதளங்களில் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கும் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும். இதனை அதிக விலை கொடுத்து வாங்காமல் நாமே வீட்டிலும் எளிதாக தயாரிக்கலாம்.

- Advertisement -

ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டு அதில் வரட்டியை பொடி செய்து கொஞ்சமாக தடவி கொள்ளுங்கள். பிரஷ்ஷான பசுஞ்சாணத்துடன் பால், தயிர், நெய் மற்றும் கோமியம் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சம் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு பிசைந்து அகல் விளக்கில் வைத்து அழுத்தம் கொடுத்து விளக்கு போல செய்ய வேண்டும். அடியில் வரட்டியை நாம் தடவி வைத்திருப்பதால் அழகாக விளக்கு போல எடுக்க வரும். 2 நாட்கள் நன்கு அடிக்கிற வெயிலில் காய விட்டு எடுத்தால் சுலபமாக பஞ்சகவ்ய விளக்கு தயாராகிவிட்டது. இதனை கைகளிலும் அகல் போல நாம் செய்து கொள்ளலாம்.

Panjakavya-vilakku

தினமும் இந்த விளக்கை மகாலட்சுமிக்கு ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த விளக்கை ஏற்றும் பொழுது விளக்கும் உடன் சேர்ந்து எரிய விட வேண்டும் விளக்கில் இருந்து வரும் புகையை வீடு முழுவதும் பரவும் பொழுது ஒரு ஹோமம் செய்த பலன் நமக்குக் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும்.

- Advertisement -

மகாலட்சுமி விக்ரகம் வைத்திருப்பவர்கள் பால், பன்னீர், மஞ்சள், குங்குமம் என்று உங்களுக்கு விருப்பமுள்ள அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். சங்கு வைத்திருந்தால் சங்கின் மூலம் அபிஷேகம் செய்யுங்கள். படம் வைத்திருப்பவர்கள் வாசனை மிகுந்த மலர்களால் படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பின்னர் பால் சார்ந்த பொருட்களை நைவேத்தியம் படையுங்கள். பால் பாயாசம், பால் கொழுக்கட்டை என்று உங்களுக்கு விருப்பமானதை படைக்கலாம். பின்னர் மகாலட்சுமிக்கு விருப்பமுள்ள பஞ்ச திரி போட்டு பஞ்சமுக குத்து விளக்கை ஏற்ற வேண்டும். அதில் நெய் மற்றும் நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

kuthu-vilakku

ஐந்து முக விளக்கு மற்றும் பஞ்ச கவ்ய விளக்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்து, தூப, தீப ஆராதனை காண்பிக்க வேண்டும். விளக்கு முழுவதுமாக எரிந்து முடிந்த பின்பு சாம்பலாகிவிடும். இது சுத்த திருநீறு ஆகும் எனவே இதனை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு வர நீங்கள் தொடங்கிய எல்லாமே வெற்றி அடையும். மேலும் இதனை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு உரமாகவும் கொடுக்கலாம். இவ்வாறு பஞ்ச கவ்ய விளக்கை பயன்படுத்தி தினமும் தீபம் ஏற்றி வர உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக மறைந்து வருவதை நீங்களே உணரலாம். அதிஷக்தி வாய்ந்த இந்த எளிய மகாலட்சுமி பூஜை முறையை நீங்களும் செய்து பயன் பெறலாமே!

- Advertisement -