இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் தடை நீங்கி லாபம் அதிகரிக்குமாம்! அள்ள அள்ள குறையாத வருமானத்திற்கு லக்ஷ்மி தேவியை இப்படித்தான் வழிபட வேண்டும் தெரியுமா?

lakshmi-lotus
- Advertisement -

செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக் கூடியவர் மகாலட்சுமி. இவருக்கு உதவியாளராக பணி புரிகின்றவர் குபேரர். லட்சுமி குபேரர் இருக்கும் இடத்தில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நியதி! அந்த வகையில் தொழிலில் லாபம் அதிகரிக்க, வருமானம் பெருக மகாலட்சுமியை எப்படி முறையாக வழிபட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை உண்டு. அந்த வகையில் மகாலட்சுமிக்கு உகந்த சில பொருட்களும் நம் கண் முன்னே இருக்கின்றன. இப்பொருட்களை வைத்து மகாலட்சுமியை வழிபடும் பொழுது குறைவில்லாத வருமானம் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

பஞ்சலக்ஷ்மிகளும் ஆட்சி புரிகின்ற இந்த பொருட்கள் பால், தேன், தானியக்கதிர், தாமரை பூ, நாணயங்கள் ஆகிய ஐந்தும் ஆகும். இந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் எப்பொழுதும் நிறைந்திருப்பதாக கூறுகிறது சாஸ்திரம். பாலில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பாலில் மட்டும் இல்லாமல் ஏனைய நான்கு பொருட்களிலும் மகாலட்சுமி நீக்கமற நிறைந்திருக்கிறாள். இவற்றை பஞ்சலக்ஷ்மிகளின் அடையாளமாக கூறப்படுகிறது.

எனவே நீங்கள் பூஜை செய்யும் பொழுது பால், தேன், தாமரை பூ மற்றும் நாணயங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். தானியக்கதிர் எல்லோருக்கும் எளிதாக கிடைப்பது கிடையாது. கிராமப்புறங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு இது கிடைக்கும். ஆனால் நகரத்தார் வாழ்க்கையில் இவற்றை காண்பது அரிது எனவே தானிய கதிருக்கு பதிலாக தானியங்களை வைக்கலாம். அரிசி, நெல் போன்றவற்றை வைத்து நீங்கள் வழிபடலாம்.

- Advertisement -

சுகபோக வாழ்க்கைக்கு உரியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவானுக்கு உரியது வெள்ளி ஆகும். எனவே வெள்ளி கிண்ணத்தில் நாணயங்களை போட்டு வைத்தால் சுக்கிர – லட்சுமியின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். எப்பொழுதும் பூஜை அறையில் வெள்ளி கிண்ணத்தில் சிறிதளவு நாணயங்களை போட்டு வையுங்கள். குறிப்பாக தொழில் செய்பவர், வியாபாரம் செய்பவர் இது போல செய்து வைப்பதால் அவர்களுக்கு வருமானம் உயரும். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பஞ்ச லட்சுமிகளின் அடையாளமாக இருக்கக்கூடிய இந்த பஞ்ச பொருட்களையும் வைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தாமரைப்பூ கிடைப்பதும் சற்று கடினமானது தான் எனவே முந்தைய நாட்களில் இவற்றை வாங்கி தயாராக வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். பின்னர் நீங்கள் வெள்ளிக் கிழமையில் தாமரை மலரை மகாலட்சுமி தேவிக்கு சாற்றி வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே:
பிள்ளையாருக்கு இதை செய்தால் நீங்கள் ஆசைப்பட்ட வேலை உடனே கிடைக்கும் தெரியுமா? நினைத்த வேலை கிடைக்க எளிய பரிகாரம்!

நீங்கள் வழிபடும் பொழுது மகாலட்சுமியின் மந்திரங்களை உங்களுக்கு தெரிந்த அளவிற்கு உச்சரிப்பது ரொம்பவே விசேஷமானது. வீட்டில் செய்வதை காட்டிலும் வருமானம் செழிக்க கூடிய இடங்களில் செய்வது மிகவும் சிறப்பு! எனவே நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் மகாலட்சுமி படம் ஒன்றை வைத்து இது போல தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தவறாது பூஜை செய்து வந்தால் வருமானம் ஆனது அதிகரிக்க துவங்கும். தடைகள் நீங்கும். செல்வ வளமானது உயரும்.

- Advertisement -