நீங்களும் பரம்பரை பணக்காரர்களாக மாறுவதற்கு சூட்சமமான வழிபாட்டுக் குறிப்புகள் உங்களுக்காக.

gajalakshmi-cash
- Advertisement -

பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. உங்களுக்கும் பரம்பரை பரம்பரையாக, உங்களுடைய குடும்பம் பணக்காரர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், ஆன்மீக ரீதியாக உங்களுடைய வீட்டில் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதையெல்லாம் நாம் பின்பற்றி வந்தால் நம்முடைய குடும்பம் தலைமுறை தலைமுறைக்கும் சீரும் சிறப்புமாக செல்வ செழிப்புடன் இருக்குமா. அது சரி, பரம்பரை பணக்காரர்கள் ஆக இருப்பவர்கள் எல்லாம், இதை பின்பற்றி தான், பணக்காரர்கள் ஆனார்களா? என்ற கேள்வி நிச்சயம் எல்லோருடைய மனதிலும் எழும்.

பின் சொல்லக் கூடிய சில விஷயங்களை இன்றளவும் பெரிய பெரிய பணக்காரர்கள் பின்பற்றித்தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய சூட்சமத்தை யாரிடமும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட சூட்சுமமான சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

எந்த வீட்டில் இறைசக்தி நிலையாக குடிகொண்டிருக்கிறதோ, எந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் தெய்வத்தின் கர்ப்ப கிரகத்திற்குள் நுழைவது போல உணர்வு வருகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக குடியிருப்பாள். உங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு சுவாமி விக்ரகங்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைப்பீர்கள் அல்லவா, அந்த மஞ்சளுடன் சிறிது சந்தனம், சிறிது கோரோசனை சேர்த்து, பன்னீர் ஊற்றி குழைத்து இந்த திலகத்தை தெய்வ திருவுருவப் படங்களுக்கு வைத்து, அதன் மேலே குங்கும பொட்டு வைக்கும் போது உங்களுடைய பூஜை அறை கோவில் கர்ப்பகிரகம் போல எப்போதுமே மணமாக இருக்கும். இறை சக்தியும் சாந்தமாக வீட்டில் குடியிருக்கும். மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்குவாள்.

இதேபோல வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டு அருகில் கோசாலை இருந்தாலோ, அல்லது வீட்டிற்கு அருகில் யாரேனும் பசு மாடு வளர்த்து வந்தாலும் அந்த பசு மாட்டிற்கு கோரோசனம் சந்தனம் மஞ்சள் கலந்த திலகத்தை, நெற்றியில் இட்டு, குங்குமப் பொட்டு வைத்து இதேபோல பசுமாட்டின் பின் பக்கத்திலும் பொட்டு வைத்து தொட்டு வணங்கி வர உங்களுக்கு லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக கிடைக்கும்.

- Advertisement -

தினந்தோறும் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாதஸ்வர இசையை ஒலிக்க விட்டு யார் வீட்டில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுடைய வீட்டில் பண கஷ்டம் இருக்காது.

அடுத்தபடியாக குலதெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தை காக்கும் வழிபாடு. நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வேலையை ஆரம்பித்தாலும் சரி, குலதெய்வ உண்டியலில் முதலில் காணிக்கை செலுத்த வேண்டும். அப்படியில்லையென்றால் உங்கள் வீட்டிலேயே ஒரு மஞ்சள் துணியில் முதலில் காணிக்கையை முடிந்து எடுத்து வைத்துவிட்டு, தான் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது வேலை சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, சொந்த தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் சரி, சுபகாரியம் தொடங்குவதாக இருந்தாலும் சரி, எது புதியதாக தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு முதலில் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

இறுதியாக பணம் படைத்தவர்கள் தங்களுக்கு, அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி படக்கூடாது என்று நினைப்பார்கள். கண் திருஷ்டி மூலம் நிச்சயமாக பெரிய பாதிப்புகள் உண்டாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதனாலேயே மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் அவர்கள் ஏதாவது ஒரு காவல் தெய்வத்தை வழிபடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அமாவாசை அன்று கருப்புசாமி முனிஸ்வரர் இப்படி எந்த ஒரு காவல் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும் நம் மேல் இருக்கக் கூடிய கண்திருஷ்டி கழிந்து விடும். ஒரே ஒரு முறை, ஒரு மாதம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் பத்தாது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் கழிப்பது சிறந்தது.

தொடர்ந்து இந்த அமாவாசை காவல் தெய்வ வழிபாடு, முன்னேற்றத்தை தருவதற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் பல தடைக்கற்களை படிக்கற்களாக மாறும். நல்ல மாற்றம் தெரியும். வீட்டில் செல்வ வளம் உயர்ந்து கொண்டே செல்லும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -