எதிரி சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நரசிம்மர் வழிபாடு

temple
- Advertisement -

ஒரு சில எதிரிகள் நமக்கு தெரியாமலேயே, நம் வாழ்க்கையை கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள். நம் உடன் தான் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய நமக்கு தெரியாமல் நம் கூடவே இருந்து, நமக்கு பின்னால் குழி பறிப்பார்கள். நம்மைப் பற்றி தப்பு தப்பாக மேலதிகாரிகளிடம் சொல்லி விடுவார்கள்.

இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய பிரமோஷன், கிடைக்காமல் போய்விடும். சில பேர் வியாபாரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சூழ்ச்சி செய்வார்கள். நம்மை தோற்கடித்து விடுவார்கள். இதனால் நமக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும். இப்படி சில சொந்தக்காரங்க கூட இருப்பாங்க. நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப் படுபவர்கள், நம்மை வாழ விடாமல் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு எதிராக செய்து கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிரிகள் இருந்தாலும் சரி, அவர்களுடைய சூழ்ச்சியை முறியடிக்க நீங்கள் இந்த நரசிம்மரை கூப்பிடுங்க. இந்த கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

எதிரி தொல்லை நீங்க நரசிம்மர் வழிபாடு

இந்த கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் பரிக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ளது. பரிக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில். பொதுவாகவே நரசிம்மர் என்றால் உக்கிரமாக இருப்பவர் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இந்த கோவிலில் சாந்தமான நரசிம்மர் லட்சுமி தாயாரை தன் மடியில் அமர வைத்துக் கொண்டிருக்கிறார். சந்தோஷமாக இருக்கும் இந்த நரசிம்மரிடம் நீங்கள் எந்த வரத்தை கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார்.

- Advertisement -

விழுப்புரத்துக்கு பக்கத்தில் இருப்பவர்கள் வாரம் தோறும், விழுப்புரம் சென்றுவர முடியும் என்று சொல்லுபவர்கள், இந்த கோவிலுக்கு வார வாரம் சனிக்கிழமை அன்று சென்று இந்த லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் எதிரிகளால் எந்த பிரச்சனையும் வராது.

சில பேருக்கு ஜாதக கட்டத்தில் சூரியன் சனிபகவான் சேர்க்கையின் மூலம் நிறைய பிரச்சனைகள் வேலையில் வரத் தொடங்கி விடும். அதிலும் குறிப்பாக அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு நிறைய பிரச்சனை வரும். இப்படிப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு போனால் உங்கள் பிரச்சனை சரியாகும்.

- Advertisement -

இந்த கோவிலில் இருந்து ரொம்ப தொலைதூரத்தில் இருப்பவர்கள், இந்த கோவிலுக்கு அடிக்கடி வர முடியாது என்பவர்கள் ஒரு சனிக்கிழமை மட்டுமாவது இந்த லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு செல்லுங்கள். மற்ற சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தபடியே இந்த நரசிம்மரை மனதார நினைத்து வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

வேலையில் பிரச்சனை இருந்தால் மட்டும் அல்ல உங்களுடைய சொத்து பிரச்சனை தீர, ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலில் இருந்து வெளிவர, வாழ்க்கையில் தீர்க்க முடியாத சிக்கலில் சிக்கித் தவிப்பவர்கள் கூட, இந்த கோவிலுக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பூர பரிகாரம்

உளுந்தூர்பேட்டை சாலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பரிக்கல் என்ற ஊர் அமைந்துள்ளது. அந்த இடத்தில் தான் இந்த நரசிம்மர் நமக்கு அருள் பாவித்து கொண்டிருக்கிறார். விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் இருந்து இந்த ஊருக்கு பஸ் வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -