சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பூர பரிகாரம்

sad man karupuram
- Advertisement -

மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்காக தினம் தினம் ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான். இதற்காக தான் கோவில் கோவிலாக போவதும் சொல்லும் பரிகாரங்கள் எல்லாம் செய்வதுமாக பலரும் இருக்கிறார்கள். அப்படி பிரச்சனையில் துன்பப்படும் யாராக இருப்பினும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும். அவர்கள் எப்பேர்ப்பட்ட துன்பத்தில் இருந்தாலும் சரியாகும்.

இந்த கற்பூர பரிகாரத்தை இந்த பிரச்சனைக்கு தான் செய்ய வேண்டும் என்று வரையறை கிடையாது. குடும்பத்திற்குள் நிம்மதி இல்லாமல் இருப்பது, கடன் பிரச்சனை, பணதடை, வியாபார தடை இப்படி ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்க கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வாக இந்த பரிகாரம் உள்ளது. அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர பரிகாரம்

நம் வீடு எப்பொழுதும் நேர்மறை சிந்தனை உடன் கண் திருஷ்டி தீய சக்திகள் போன்றவை நெருங்காமல் காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வீட்டில் உள்ள நாம் நல்ல முறையில் இருந்தால் மட்டும் போதாது நம் வீட்டிற்கு வருபவர்களுடைய எண்ணமும் நன்றாக இருக்க வேண்டும். ஆகையால் சனிக்கிழமை இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஒரு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கற்பூரத்தை வைத்து வீட்டின் நிலை வாசலில் வைத்து ஏற்றி விடுங்கள்.

இந்த கற்பூரம் எரியும் போது அதன் முன்பு நின்று நீங்கள் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அதாவது இந்த வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் நல்ல எண்ணத்துடன் தான் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நல்லவர்களே என்று நீங்கள் முதலில் நேர்மறையாக சிந்தித்து வேண்ட வேண்டும். இந்த கற்பூரம் அணைந்த பிறகு நீங்கள் உறங்க செல்லலாம். அதன் பிறகு உங்கள் வீடு தேடி தீய எண்ணத்துடன் வருபவர்கள் கூட உள்ளே நுழையும் போது அந்த எண்ணத்தை மாற்றக் கூடிய ஆற்றல் இந்த பரிகாரத்திற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமையில் தொடங்கிய இந்த பரிகாரத்தை 43 நாட்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்போது வீட்டில் உள்ள நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் நம்முடன் ஆரா சக்தியை அதிகரிக்கவும் கற்பூரத்தை வைத்து செய்யக் கூடிய பரிகாரத்தை பார்க்கலாம். இதையும் சனிக்கிழமை இரவு தான் செய்ய வேண்டும். அதற்கு சாப்பிட்டு முடித்த பிறகு சமையலறையில் முதலில் சுத்தம் செய்ய வேண்டும் சாப்பிட்ட எச்சில் பாத்திரம் இருக்கக் கூடாது. அடுப்பு ,சிங் என அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இப்போது சுத்தமான நெய்யில் இரண்டு கற்பூரத்தை முக்கி எடுத்து அதை அகலில் வைத்து சமையல் அறையில் எரிக்க வேண்டும். இதை 43 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் சனிக்கிழமையில் தொடங்கிய இந்த பரிகாரத்தை தொடர்ந்து 43 நாட்கள் வரை செய்ய வேண்டும் எப்படி எரியும் வேலையில் உங்களுக்குள் இருக்கும் தீய ஆற்றல் வீட்டிலிருக்கும் அனைத்தும் நீங்கி குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று மனதார நினைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற தீபம்

இதையெல்லாம் செய்ய முடியாதவர்கள் ஒரு சிறிய வெள்ளி கிண்ணத்தில் இரண்டு கற்பூரத்தை போட்டு தினமும் அதை எரித்து வந்தாலும் பல நல்ல மாற்றங்களை சந்திக்க முடியும் வரும். பிரச்சனைகள் உங்களைத் தேடி வராமல் இருக்கவும் வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கற்பூரத்தை வைத்து செய்யக் கூடிய இந்த எளிய பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் தாராளமாக நீங்களும் செய்யலாம்.

- Advertisement -