மாட்டுப் பொங்கல் அன்று பசுவிற்க்கு செய்ய வேண்டிய தானம்

mattu-pongal
- Advertisement -

இந்த பூலோகத்தில் பிள்ளைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் கூட, தான் பெற்ற பிள்ளைக்கு மட்டும்தான் பாலூட்டுகிறார்கள். ஆனால் பசு தன்னுடைய ரத்தத்தை பாலாக மாற்றி, எல்லா குழந்தைகளுக்கும் பால் தரக்கூடிய வரம் பெற்று இருக்கிறது. பசுவில் மகாலட்சுமியும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்வதாக ஐதீகம்.

உங்களுக்கு ஆன்மீக ரீதியாக நம்பிக்கை இருந்தாலும் இந்த தானத்தை செய்யலாம். ஆன்மீகத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய, குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடிய ஒரு வாயில்லா ஜீவன் என்ற அடிப்படையில் இந்த தானத்தை நீங்கள் செய்தாலும், சிறப்பான பலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டு பக்கத்தில் பசுவே இல்லையா. நாங்கள் எப்படி தானம் செய்வது என்று நீங்கள் கேள்வி கேட்டாலும் அதற்கும் ஒரு பதில் இந்த பதிவை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

மாட்டுப் பொங்கல் அன்று பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்

இன்று பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பசு மாட்டிற்கு சர்க்கரை பொங்கல் வைத்து அந்த சர்க்கரை பொங்கலை பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். மாடு வைத்திருப்பவர்களுக்கு தானமாக வெல்லம் பச்சரிசி, அந்த மாட்டுக்கு புது வஸ்திரம், வாழைப்பழங்கள், இப்படிப்பட்ட பொருட்களை தானமாக வாங்கிக் கொடுக்கலாம். எல்லாமே சிறப்பு தான்.

- Advertisement -

ஆனால் இன்று நீங்கள் கொஞ்சம் கோதுமை மாவு அல்லது முழு கோதுமையோகவோ இந்த இரண்டில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி பசுவிற்கு தானமாக கொடுப்பது சிறப்பு. பசுமாடு இன்று நிறைய சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு வயிறு நிரம்ப நிம்மதியாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பசுமாட்டிற்கு அடுத்த அடுத்த நாளுக்கும் தீவனம் தேவையில்லையா.

உங்களால் முடிந்தவரை ஐந்து கிலோ கோதுமையை வாங்கி பசு வைத்திருப்பவர்களுக்கு தானமாக கொடுத்தாலும், உங்களுக்கு புண்ணியம் சேரும். கர்ம வினைகள் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இது தவிர நீங்கள் பசு சாப்பிடும் படியான வேறு எந்த பொருளை வேண்டுமென்றாலும் வாங்கி தானமாக கொடுக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. சில பேர் வீட்டு பக்கத்தில் பசு இருக்கவே இருக்காது. தானம் செய்யக் கூடிய வாய்ப்பே இல்லை நாங்கள் என்ன செய்வது என்றால் இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

பூஜையறையில் கோமாதாவின் சிலை இருந்தால் அதற்கு இன்றைக்கு கண்டிப்பாக அபிஷேகம் பண்ணி, இரண்டு வாழைப்பழம் வைத்து கற்பூர ஆரத்தி காட்டணும். பசுவுக்கு தானம் கொடுத்தாலும் சரி, இன்று வீட்டில் கோமாதா சிலை, கோமாதா புகைப்படம் வைத்திருப்பவர்கள் அந்த சுவாமிக்கு நிச்சயம் பூஜை செய்யணும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

பூஜை அறையில் நின்றபடி கோமாதாவை மனதில் நினைத்துக் கொண்டு ‘ஓம் காமதேனுவே நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொன்னாலும். உங்களுக்கு அந்த பசுவின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் செய்த பாவங்களுக்கு உண்டான கர்மாக்களும் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இன்று இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்பு எல்லோருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -