பதவி உயர்வு கிடைக்க வளர்பிறையில் செய்ய வேண்டிய வழிபாடு

madangi
- Advertisement -

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றால் அதற்கான வழிபாட்டை நாம் வளர்பிறையில் செய்ய தொடங்க வேண்டும். இன்றைய தினம் மாசி அமாவாசை. அமாவாசை முடிந்தவுடன் வளர்பிறை தொடங்கும். வளர்பிறை தினத்தில் பின் சொல்லக் கூடிய அம்பாள் வழிபாட்டை முறையாக மேற்கொள்பவர்களுக்கு, வேலையில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

வேலையே இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையை நல்லபடியாக மாற்றப் போகும் அந்த அம்பாள் வழிபாட்டை பற்றி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வேலையில் முன்னேற்றம் ஏற்பட வழிபாடு

காலை அல்லது மாலை ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும். பிறகு இந்த வழிபாட்டை செய்யணும். திறமையாக இருப்பவர்களுக்கு நல்ல வேலையும் நல்ல பதவியும் கிடைக்க செய்யக்கூடிய வழிபாடு ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி வழிபாடு.

செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது என்று சொல்லுவார்கள். கல்வி இருக்கும் இடத்தில் செல்வம் இருக்காது என்று சொல்லுவார்கள். ஆக திறமையுள்ளவர்களுக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் இருக்காது. திறமையை இல்லாதவர்கள் நல்ல உத்தியோகத்தில் நல்ல சம்பளத்தில் அமர்ந்திருப்பார்கள். ஆக ஒரு மனிதனுக்கு செல்வமும் கல்வியும் ஒரு சேர தேவை என்றால் மாதங்கி தேவியை வழிபாடு செய்யணும்.

- Advertisement -

பூஜை அறையில் ஏற்றி வைத்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய பிரச்சனைகளை அம்பாளின் பாதங்களில் இறக்கி வையுங்கள். மாதங்கி தேவியின் திருவுருவப்படம் பூஜை அறையில் இல்லை என்றாலும் உங்கள் வீட்டு அம்பாளையே மாதங்கிதேவியாக நினைத்துக் கொள்ளலாம். அம்பாளின் ஸ்வரூபம் தான் இந்த மாதங்கி. மாதங்கியே மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

மாதங்கி தேவி மந்திரம்

ஓம் தர்மசீலாயை நமஹ
ஓம் பவான்யை நமஹ
ஓம் சித்த ரூபிண்யை நமஹ

- Advertisement -

மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள். தொடர்ந்து 48 நாள் பூஜை அறையில் அமர்ந்து மாதங்கி தேவியை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அந்த அம்பாளின் பரிபூரண அருள் ஆசை கிடைக்கும். ரொம்ப ரொம்ப திறமையா இருந்து அலுவலகத்தில் பிரமோஷன் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் உங்களுடைய திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு கிடைக்கும். அதற்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும்.

நல்ல திறமை இருந்து நல்ல படிப்பு இருந்து நல்ல வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் கூடிய சீக்கிரத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற வேலையை அந்த அம்பாள் காட்டிக் கொடுப்பாள். நான் பெரிய பதவியில் இருக்கின்றேன் ஆனால் அந்த பதவிக்கு ஏற்றவாறு என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பவர்கள், இந்த வழிபாட்டை செய்தால் உங்களுடைய திறமையை வளர்க்கவும் இந்த மாதங்கிதேவி அருள் புரிவாள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக, அமாவாசை திதியில் திருஷ்டி கழிக்கும் முறை.

வாழ்க்கையின் வளர்ச்சிக்காக இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்கின்றோம் அல்லவா. ஆகவே இந்த வளர்பிறை நாட்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வளர்பிறை வெள்ளிக்கிழமையாக பார்த்து இந்த வழிபாட்டை தொடங்கும் போது இதற்கான பலன் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -