உங்கள் சருமம் எப்போதும் பட்டுப் போல பல பலன்னு மின்னிக் கொண்டே இருக்க, 1 துண்டு பட்டை போதும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

face9
- Advertisement -

பார்ப்பதற்கு முகம் எப்போதும்பளிச்சென இருக்க வேண்டும். பட்டு போல தகதகவென மின்னிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால் என்ன செய்வது. சில பேருக்கு முகத்தில் கருப்பு புள்ளிகள், முகப்பருக்கள், எண்ணெய் வடிந்த சருமம், கருந்திட்டுக்கள் என்று பல பிரச்சனைகள் முகத்தில் நிரந்தரமாக இருக்கத்தான் செய்கிறது. அதை மறைக்க மேலே மேக்கப்பை போடுகின்றோம். மேக்கப் தமக்கு நிரந்தர தீர்வை கொடுக்காது. இயற்கையாக நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே முகத்தில் இருக்கும் பிரச்சனையை படிப்படியாக குறைக்க முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு டம்ளர் அளவு தண்ணீரை அடுப்பில் வைத்து சிறிய துண்டு பட்டை இரண்டு மூன்றாக உடைத்து அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். 1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் தண்ணீர் சுண்டி வர வேண்டும். அந்தத் தண்ணீரின் நிறம் பிரவுன் கலராக மாறும். அப்போது அடுப்பை அணைத்து விட்டு, அதில் இருக்கும் பட்டை துண்டுகளை வடிகட்டி விட்டு, வெறும் தண்ணீரை மட்டும் நன்றாக ஆறவைத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டார் செய்து வைத்துக் கொண்டால். 5 நாட்கள் வரை இந்த தண்ணீரை நாம் பயன்படுத்தலாம். இந்த பட்டை தண்ணீரை தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தில் லேசாக ஸ்பிரே செய்து அப்படியே விட்டு விடலாம். (ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் பின் சொல்லக்கூடிய அழகு சம்பந்தப்பட்ட குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.) இந்தப் பட்டை தண்ணீர் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

உங்களுடைய முகத்தை மேக்கப் எதுவும் இல்லாமல் முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சாத பச்சை பாலினால் முகத்தை சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். அதன் பின்பு முகத்தில் மூடி இருக்கும் துவாரங்களை திறக்க வைக்க வேண்டும். அதாவது போர்ஸ் ஓபன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

சுடு தண்ணீரில் ஒரு காட்டன் துண்டை நனைத்து உங்கள் முகம் பொறுக்கும் சூட்டில் அந்த துண்டை முகத்தில் லேசாக ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக கோதுமை மாவு தேன் இந்த 2 பொருட்களையும் கலந்து முகத்தை 5 லிருந்து 8 நிமிடங்கள் வட்ட வடிவத்திலும் கீழிருந்து மேல் பக்கத்திலும் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஐந்து நிமிடங்கள் இந்த பேக் உங்க முகத்தில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு தயார் செய்து வைத்திருக்கும் பட்டை தண்ணீரை முகத்தில் லேசாக ஸ்பிரே செய்து விட்டு விட வேண்டும். இந்தத் தண்ணீரை முகத்தில் இருந்து துடைத்து எடுக்க வேண்டாம். அந்தத் தண்ணீரை அப்படியே உங்கள் முகம் உறிஞ்சிக் கொள்ளும். அப்படியே விட்டுவிடுங்கள். 2 நிமிடம் கழித்து முகம் காய்ந்த உடன், நீங்கள் எந்த மாய்சுரைசர் கிரீமை பயன்படுத்துவீர்களோ, அதை முகத்தில் போட்டுக்கொள்ளலாம். மாய்சுரைசர் இல்லை என்றால், அலோ வேரா ஜெல் இருந்தாலும் அதை முகத்தில் அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்து வர உங்களுடைய முகம் பொலிவாக இருக்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் முகத்தை சுத்தம் செய்து பேக் போட்டு பட்டை தண்ணீரை ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து தினம் தோறும் இரவு தூங்கச் செல்லும் போது உங்களுடைய முகத்தில் இருக்கும் முகப்பரு கரும்புள்ளிகள் குறைய சாதாரணமாகவே இந்த பாட்டை தண்ணீரை ஸ்பிரே செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -