கோரை கோரையாய் சடை போல இருக்கும் உங்க முடிய கூட நல்ல காற்றில் அலையும் பட்டுநூலை போல ஷைனிங்கா சாப்டா மாத்த ஐந்து வெண்டைக்காய் இருந்தா போதும். இனி நீங்க நினைச்ச ஹேர் ஸ்டைல நெனச்ச டைம்ல பண்ணலாம்.

Sliky hair
- Advertisement -

தலைமுடி அழகாக நீளமாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவு தான். ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தால் தலைமுடி சுருண்டு சுருண்டு கோரை புல் போல இருக்கும். இவர்களால் எந்தவித ஹேர் ஸ்டைலும் செய்ய முடியாது . அதை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும் இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் இது போன்ற முடியை கூட நல்ல பட்டு நூல் போல சாப்பிட்டாக மாற்றக் கூடிய ஒரு குறிப்பை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இன்றைய நவீன காலத்தில் மாற்ற முடியாதது எதுவும் இல்லை எனும் அளவிற்கு எல்லாவற்றிற்கும் மாற்று வழி வந்து விட்டது. அந்த வகையில் இயற்கையாகவே கோரை புல் போல சுருட்ட முடி இருப்பவர்கள் கூட வீட்டிலே இந்த ஒரு குறிப்பை பயன்படுத்தும் போது நல்ல சாப்டா பட்டுப் போன்று தலைமுடியை பெறலாம் அது எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கோரை கோரையாக இருக்கும் முடி கூட சாப்பிட்டாக மாற
இந்த பேஸ்டை தயாரிக்க முதலில் ஐந்து வெண்டைக்காவை சின்ன சின்னதாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கொதித்தாலே போதும் தண்ணீர் வெண்டைக்காயுடன் வெந்து நல்ல ஜெல் பதத்திற்கு கிடைத்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த ஜெல் சிறிது நேரம் ஆகட்டும்.

இப்போது இன்னொரு சின்ன பௌலில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்து வெண்டைக்காய் ஜெல்லுடன் சேர்த்து நன்றாக கலந்த பிறகு மீண்டும் இதை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கை விடாமல் மிதமான தீயில் கலக்கும் போது இது ஒரு நல்ல பேஸ்ட் பத்திற்கு வந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே இந்த பேஸ்ட்டை ஒரு மெல்லிய காட்டன் துணியில் சேர்த்து நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய பின் கிடைத்த ஜெல்லை நன்றாக ஆற வைத்த பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்தால் தலைக்கான ஜெல் தயார்.

இந்த ஜெல்லை உங்கள் தலையில் தேய்ப்பதற்கு முன்பாக தலையில் கொஞ்சம் கூட எண்ணெய் இருக்கக் கூடாது. எனவே தலை கசக்கி முடியை நன்றாக ஆற வைத்த பிறகு இந்த ஜெல்லை உங்கள் முடிவில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதை அப்ளை செய்த பிறகு குறைந்தது 2 மணி நேரமாவது உங்கள் தலைமுடியில் இந்த ஜெல் இருக்க வேண்டும். அதன் பிறகு ஷாம்பூ சேர்க்க எதையும் போடாமல் அப்படியே தலை முடியை அலசி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பிக்மண்டேஷனை குறைக்க, முகத்தை உடனடியாக பொலிவாக மாற்ற இதுதான் சூப்பர் ஐடியா. இப்போதான் முகத்தில் சின்ன சின்ன கருப்பு புள்ளிகள் வருவது போல தெரிந்தாலும் உடனே இதை படிங்க.

அதன் பிறகு பாருங்க கோரை கோரையாய் சடை போல இருந்த உங்கள் முடி நல்ல சாஃப்ட்டா ஷைனிங்கா அழகா மாறிடும். இதுக்கப் புறம் இந்த முடியில் நீங்க எந்த விதமான ஹேர் ஸ்டைல் வேணாலும் பண்ணலாம் இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -