கஷ்டத்தை கொடுக்கும் பாவ மூட்டையை சுமந்து சிரமப்படுகிறீர்களா? பாவத்தைக் கழிக்க இந்த 1 பொருளை தலையை சுற்றிப் போடுங்கள் போதும்.

amavasai1
- Advertisement -

அறிந்தோ அறியாமலோ நாம் என்றோ செய்த பாவத்திற்காக தான் இன்றைக்கு வாழும் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றோம். இதை ஒரு சில பேர் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு பாவத்தை செய்வதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  பாவக் கணக்கு இல்லை என்றால் அவர்கள் நிச்சயமாக மனிதர்கள் இல்லை. மகான்கள் ஆகத்தான் இருக்க முடியும். மகான்களாக இருந்தாலும் தெய்வங்களாக இருந்தாலும்கூட அவர்கள் பாவம் செய்துவிட்டால் அதற்கான தண்டனைகள் உண்டு என்பதை புராணங்களில் நாம் படித்திருக்கின்றோம்.

உதாரணத்திற்கு எத்தனையோ ரிஷிகள் முனிகள் தேவதைகள் அவர்கள் செய்த தவறுக்காக பூலோகத்தில் மனித பிறவி எடுத்து அந்த பாவ புண்ணியக் கணக்குகளை சரிசெய்து மீண்டும் தேவலோகத்தை அடைந்திருக்கிறார்கள். இப்படி பாரபட்சமில்லாமல் பாவத்திற்கான தண்டனையை இந்த பிரபஞ்சம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

- Advertisement -

சரி மனிதப் பிறவியில் இருக்கக்கூடிய, நம் தலைமீது சுமக்கும் பாவத்தை எப்படி இறக்கி வைப்பது. பாவத்திற்கான விமோசனம் முழுமையாக கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கொடுக்கக்கூடிய தண்டனை குறைய வேண்டும் என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பாவங்களை போக்க கூடிய சக்தி பாவக்காய்க்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

மாதம்தோறும் வரக்கூடிய அம்மாவாசை இரவு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு வெள்ளைத்துணியில் ஒரே ஒரு பாவக்காய் வைத்து முடிச்சுப் போட்டு அந்த பாகற்காயை உங்களுடைய தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். இந்த பாகற்காயை அமாவாசை இரவு நீங்கள் தூங்கும் போது உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து முடிச்சை அவிழ்க்க கூடாது. அந்த வெள்ளை துணையோடு கொண்டு போய் யார் கைக்கும் படாமல் மனிதர்கள் கால் படாத இடத்தில் தூரமாக தூக்கி போட்டுவிட்டு வந்து விடுங்கள். இதேபோல 11 அமாவாசை செய்துவர உங்களுடைய பாவ கணக்குகளில் கொஞ்சம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பாவக்காய் என்பது கசப்பு சுவை நிறைந்த ஒரு பொருள். இந்த பாவக்காய், கசப்பான நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டத்தை கூட உறிஞ்சி எடுக்கக் கூடிய தன்மை உண்டு. இந்த சிறிய பரிகாரத்தை அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

கசப்பு என்று எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்படும் இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் சிறப்பு. வயிற்சியில் தேவையற்ற ஏதாவது விஷயங்கள் இருந்தாலும், அதை வெளியேற்ற கூடிய சக்தி இந்த பாகற்காய்க்கு உண்டு. புழு பூச்சி ஆக இருக்கட்டும் அல்லது நீங்கள் வேண்டாத இடத்தில் ஏதாவது வேண்டாத விஷயங்களை சாப்பிட்டு அதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் தடை இருந்தாலும் அதை கசக்கி வெளியே இழுத்து தள்ளி விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -