பாவங்கள் தீர பரிகாரம்

sad man ant black elu
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் இன்று தான் பெறும் இன்பம் துன்பம் அனைத்திற்கும் அவனே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுடைய கர்ம வினைகள் தான் அவனுடைய இன்றைய வாழ்நாளை தீர்மானிக்கிறது. அப்படி இருக்கையில் இன்று நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நிச்சயம் எதிர்வினையான பலன் உண்டு. இதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாம் செய்யும் நன்மைகள் எப்படி செய்து நமக்கு நன்மையாக திரும்ப வருகிறதோ, அதே போல் தீமையானது பல மடங்கு திரும்ப வரும். அது எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் தொடரும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆகையால் தான் நாம் வாழும் இந்த நாட்களில் யாரையும் துன்பப்படுத்தாமல் வாழ வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

நாம் எப்போதோ செய்த வினைக்கு தான் இப்போது தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் இப்போது நாம் படும் துன்பத்திற்கு என்ன செய்வது என்று புலம்புவர்களுக்கான ஒரு எளிய பரிகாரம் முறையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தின் மூலம் நாம் முற்பிறவியில் செய்த பாவத்தில் விளைவால் இப்பொழுது அனுபவிக்கும் கர்மா குறைய என்று சொல்லப்படுகிறது.

கர்மா தீர பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருள்கள் தேவை. ஒன்று பச்சரிசி மற்றொன்று எள் மூன்றாவதாக திணை. இவை மூன்றையும் சம அளவாக எடுத்து ஒன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த உணவை எறும்புகளுக்கு தானமாக வைக்க வேண்டும். இதை நீங்கள் இப்படி வைக்கும் போது எறும்பை தவிர்த்து பூமியில் வாழும் பல சின்னஞ்சிறு உயிரினங்கள் உண்டு மகிழும்.

- Advertisement -

இதை செய்யும் போது நிச்சயம் உங்களுடைய கர்மாக்கள் குறையும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே எறும்புகள் தனக்கு உணவு வைத்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டும் என்றும், அவர்கள் உடைய பாவங்கள் கரைய வேண்டும் என்று கேட்கும் என்றும் சொல்லப்படுகிறது. இத்துடன் மற்ற ஜீவராசிகளும் சாப்பிடும் போது அதற்கான பலனும் சேர்த்து உங்களுடைய கர்மா குறையும்.

வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் முற்பிறவியில் செய்த கர்மாக்களும், இப்பிறவியில் நாம் தெரியாமல் செய்த தவறுகளுக்கும் ஆன கர்மாவை இந்த பிறவியிலேயே நாம் தொலைத்து விட முடியும். இனி வரும் காலங்களில் ஆவது நிம்மதியாக வாழ வழி செய்யும். இதையெல்லாம் தான் செய்கிறோமே பிறகு என்ன என்று நினைத்து மேற் கொண்டு எந்த தவறையும் செய்யாமல் வாழ்வது தான் அனைத்திலும் விட சிறந்தாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்த வேலை கிடைக்க பரிகாரம்

கர்மா தீர செய்யப்படும் இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள். இத்துடன் மேலும் இது போல கர்மா கதை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கான நல்லதொரு வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -