நினைத்த வேலை கிடைக்க பரிகாரம்

murugan job get people
- Advertisement -

இன்று பெரும்பாலானருக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை நல்ல வேலை இல்லாதது தான். எல்லோரும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு தான் இருப்பார்கள். அது எல்லாம் அவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வேலை தானா என்றால் அது சந்தேகம்தான். வேறு வழியில்லாமல் கிடைத்த வேலையை கடமைக்காக செய்து கொண்டிருப்பார்கள். அப்படியில்லாமல் தங்களுக்கு பிடித்த வேலை கிடைக்க இந்த ஒரு எளிய பரிகார முறையை கடைப்பிடிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே வேலை கிடைத்தாலும் அந்த வேலையில் தனக்கான நியாயமான பதவி உயர்வு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமல் அவதிப்படுபவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களும் இந்த பரிகார முறையை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கந்தனை நினைத்து செய்யப்படும் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேலை கிடைக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டும். ஏனெனில் வேலைக்கான வாய்ப்பை அள்ளித் தருபவர் செவ்வாய் பகவான். செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரிய நாள் அதுமட்டுமின்றி செவ்வாய் பகவானுக்குரிய அதிபதி தெய்வம் முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானை இன்றைய நாள் நினைத்து வழிபடும் பொழுது வேலைக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். அது காலை 6 லிருந்து 7, மதியம் 1 லிருந்து 2, இரவு 8 லிருந்து 9. இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் ஏதுவாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்ய பூஜை அறையில் முருகர் படத்தை வைத்து அதற்கு முன் ஒரு அகல் தீபம் சிகப்பு திரி போட்டு ஏற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இந்த தீபத்திற்கு முன்பு ஒரு வாழை இலையை போட்டு அதில் ஒரு கிலோ துவரம் பருப்பை கொட்டி பரப்பி விடுங்கள். அந்த துவரம் பருப்பிற்கு மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து சிகப்பு நிறத்தில் திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்போது அந்த தீபத்தின் முன் அமர்ந்து முருகரின் திருப்புகழை படிக்க வேண்டும் படிக்கத் தெரியாதவர்கள் யூடியூப்பில் பாட விட்டு கேட்கலாம்.

இந்த திருப்புகழ் முழுவதுமாக முடியும் வரை நாம் பூஜை அறையில் அமர்ந்திருக்க வேண்டும் அந்த நேரத்தில் உங்களுக்கு எந்த வேலை வேண்டுமோ அல்லது வேலை தொடர்பான உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று முருகப்பெருமானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். வழிபாடு முடிந்த பிறகு இந்த துவரம் பருப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் வேலையில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்குவதுடன் நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கந்தனை நம்பியவர்கள் கைவிடப்படார் என்ற வாக்கிற்கு ஏற்ப முருகப்பெருமானை நினைத்து மனதார செய்யப்படும் இந்த வழிபாட்டிற்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணத் தேவையை பூர்த்தி செய்யும் கசகசா

ஏதோ ஒரு வேலையை செய்தோம் என்று இல்லாமல் மனதிற்கு பிடித்த வேலையை செய்யும்போது அதற்கான மன நிறைவே தனி தான். அப்படியான வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க இந்த எளிய பரிகார முறை பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கும் இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -