இதுவரை நீங்கள் சுவைத்திடாத ‘வேர்க்கடலை பால்ஸ்’! இந்த மொரு மொரு பக்கோடா ரெசிபியை புதுவிதமாக, மிக மிக சுலபமாக செய்வது எப்படி?

pakoda
- Advertisement -

இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு பக்கோடா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வேர்க்கடலை உருளைக்கிழங்கை சேர்த்து தான் இந்த பக்கோடாவை தயார் செய்யப் போகின்றோம். இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. நாவிற்கு மிக மிக சுவை தரக் கூடியது. ரெசிபி யை மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க.

potato

முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு வேகவைத்து தோலுரித்து, இந்த உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு தயாராக அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக 1/4 கப் அளவு வேர்க்கடலையை, கடாயில் போட்டு வறுத்து ஆறவிட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வேர்கடலை மொரு மொரு போடு இருக்க வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

இப்போது போண்டா செய்ய மசாலா அரவையை அரைக்க போகின்றோம். பூண்டு பல் தோல் உரித்தது – 6, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 3 அல்லது 4, சீரகம் – 1 ஸ்பூன், வறுத்த வேர்கடலை இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது போண்டாவிற்கு மாவு பிசைய போகின்றோம். அரைத்த இந்த மசாலா பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த மசாலா பொருட்களோடு பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகள், கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன், புளித்த தயிர் – 4 டேபிள் ஸ்பூன், ஏற்கனவே வேகவைத்து துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக உங்கள் கையைப் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.

pakoda1

தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். தயிரில் இருக்கும் ஈரப்பதம் போதும். தயிரில் இருக்கும் ஈரப்பதத்தோடு இந்த மாவை பிசைந்து, இந்த மாவுடன் இறுதியாக 1 கப், அளவு அரிசி மாவை போட்டு மீண்டும் ஒருமுறை பிசைய தொடங்க வேண்டும்.  தேவையான அளவு தண்ணீரை தெளித்து இந்த மாவை பிசைந்து கொள்ளுங்கள். மாவு மசால் வடை மாவு பதத்திற்கு வர வேண்டும். (அரிசி மாவு சேர்த்து இருப்பதால் இந்த போண்டா கிரிஸ்பியாக கிடைக்கும்.)

mini-mysore-bonda2

தயார் செய்த இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். கபாப் மாதிரி பிடித்தும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். வடை மாதிரி தட்டியும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

pakoda2

நன்றாக காய்ந்த எண்ணெயை மிதமான தீயில் வைத்து விட்டு, இந்த பக்கோடா களைப் போட்டு பொரித்து எடுத்து சுவைத்துப் பாருங்கள். அட்டகாசமான சுவையில் வித்தியாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தயார். உங்களுக்கு இந்த குறிப்பு படித்திருந்தால் நிச்சயமா இன்னிக்கு ஈவ்னிங் டீ டைம்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -