பீடை பிடித்த முகத்தை ஒரு நொடி பொழுதில் பிரகாசமாக மாற்ற இந்த தண்ணீரே போதும். மகாலட்சுமியின் மறு உருவமாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்.

women3
- Advertisement -

சோகம், கெட்ட சம்பவங்கள், கெட்ட வார்த்தைகள், அசுத்தம் நிறைந்த இடம், துர்நாற்றம் வீசக்கூடிய இடம், அழுகை சத்தம், உள்ள இடங்களில் நிச்சயமாக பீடை பிடிக்கும். குறிப்பாக கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கக்கூடிய முகத்தில் மகாலட்சுமி தங்க மாட்டாள். வீட்டை பிடித்திருக்கும் பீடையை விளக்கவும், நம் முகத்தில் அடைந்திருக்கும் பீடையை விளக்கவும் சுலபமான ஒரு பரிகார முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் துக்க சம்பவங்கள், சண்டை சச்சரவுகள் நடந்தால் தான் உங்கள் வீட்டை பீடை பிடிக்கும் என்பது கிடையாது. வெளியில் இருந்து வருபவர்கள் அவர்களுடைய கஷ்டத்தை சொல்லி உங்கள் வீட்டில் வந்து புலம்பினாலும் அதனுடைய தாக்கம் உங்களுடைய வீட்டில் இருக்கும். உங்களுடைய வீட்டையும் தரித்திரம் தொற்றிக் கொள்ளும்.

கூடுமானவரை அடுத்தவர்கள் வந்து உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது உங்கள் வீட்டிற்கு உள்ளேயோ அமர்ந்து அவர்களுடைய கஷ்டத்தை புலம்பி ஒப்பாரி வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக சொந்தபந்தங்கள் வந்து தங்களுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவே கூடாதா என்று நினைக்க வேண்டாம். கஷ்டங்களை சொல்லலாம் தவறு கிடையாது. ஆனால் அழுது புலம்பி அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று நம்முடைய கஷ்டங்களை ஒப்பாரி வைப்பது என்பது தவறான விஷயம். நீங்களும் அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று இப்படி ஒரு தவறை செய்யாதீர்கள்.

- Advertisement -

எந்த ஒரு தோஷத்தை கழிக்க கூடிய சக்தியும் வெறும் தண்ணீருக்கு உண்டு. வெறும் தண்ணீரை கையில் எடுத்துக்கொண்டு நீங்கள் எதை நினைத்து தெளிக்கிறீர்களோ அது அப்படியே பலிக்கும். அந்த காலத்தில் முனிவர்களை எல்லாம் பார்த்திருப்போம். கமண்டலத்தில் தண்ணீரை வைத்திருப்பார்கள். யாரையாவது சபிக்க வேண்டும் என்றால் உடனடியாக அந்த கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தை கையில் எடுத்து ஒரு மந்திரத்தை சொல்லி தண்ணீரை தெளித்து சபித்தால் அந்த சாபம் உடனே பலித்து விடும். அவ்வளவு சக்தி நிறைந்தது இந்த தண்ணீர்.

ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு துளசி இலைகளை போட்டுக் கொண்டால் உடனடியாக அந்த தண்ணீர் தீர்த்தமாக மாறிவிடும். அந்த தெளிவான தண்ணீரில் உங்களுடைய முகத்தை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் முகத்தில் இருக்கும் தரித்திரம் விலக வேண்டும். சோம்பேறித்தனம் நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து அந்த தண்ணீரில் முகத்தைப் பார்த்தால் முகத்தை பிடித்த பீடை விலகி முகம் பிரகாசமாகும். வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய பித்தளை சோம்பில் தண்ணீர் ஊற்றி இரண்டு துளசி இலைகளை போட்டு உங்களுடைய இரண்டு கைகளிலும் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜையறையில் அமர்ந்து இந்த தீர்த்தத்தை உங்கள் கையிலே வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் பச்சைக் கற்பூரம் இருந்தால் அதையும் இந்த தீர்த்தத்தில் போடலாம். மனதார குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

எங்கள் வீட்டை பிடித்த பீடை விலக வேண்டும். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, இந்த தீர்த்தத்தை உங்களுடைய வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் தெளித்து விடும்போது வீட்டை பிடித்த பீடை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன இரண்டு பரிகாரங்களுமே மிகவும் சுலபமான பரிகாரம்தான். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -