துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து கூட படுக்காது. இந்த இலைகளைக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலில் வைத்தால்!

pey-miratti
- Advertisement -

துஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் இருப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள பரிகாரங்கள் ஏராளம். அதில் ஒரு சிறந்த சக்திவாய்ந்த மூலிகை இலை பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த செடியில் இருக்கக்கூடிய இலை, வேர் இரண்டிற்குமே துஷ்ட சக்திகளை விரட்ட கூடிய அபரிவிதமான சக்தி உள்ளது. எதிர்மறை ஆற்றலை துரத்தி அடிக்கக்கூடிய அந்த செடி எது. அந்த இலையையும் வேரையும் நம்முடைய வீட்டில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

pey-miratti1

இந்த செடியினுடைய பெயரே பேய் மிரட்டி. இந்த செடியை பார்த்தால் பேய் மிரண்டு ஓடி விடும் என்பதும் இதனுடைய அர்த்தம். அதாவது வீட்டில் இருக்கும் எந்த துஷ்ட சக்திகளையும் விரட்டி அடிக்கக்கூடிய சக்தி இந்த பேய்மிரட்டி செடிக்கு உண்டு. இந்த பேய் மிரட்டி செடிகளில் இருக்கும் இலைகளைப் பறித்து அந்த இலையை திரி போல சுருட்டி மண் அகல் தீபத்தில், எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயில் இந்த பச்சை இலையை திரியாக போட்டு, தீபம் ஏற்றினால் இந்த புகைக்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த தீபத்தை நம்முடைய வீட்டில் அடிக்கடி ஏற்றக்கூடாது. நாள் கிழமை பார்க்காமல் ஏற்றக் கூடாது. அப்படி ஏற்றினால் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இந்த பேய் மிரட்டி இலை தீபத்தை அமாவாசை தினத்தன்று ஏற்றவேண்டும். பவுர்ணமி தினத்தன்று ஏற்றவேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்ற வேண்டும். தவிர மற்ற நாட்களில் இந்த தீபத்தை ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

pey-miratti2

அதோடு மட்டும் அல்லாமல் இந்த பேய் மிரட்டி செடியின் இலைகளையும் வேரையும் எடுத்து வந்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசல் படியில் தொங்கவிட்டால், வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நுழையாமல் இருக்கும். உங்களுடைய வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு பேய் மிரட்டி இலை வேர் கொண்டு தாயத்தை கூட போடலாம்.

- Advertisement -

பேய்மிரட்டி செடிக்கு காப்பு கட்டி தான் அந்த செடியில் இருந்து வேர் எடுக்க வேண்டும். உங்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து பேய்மிரட்டி செடி வேர் கிடைத்தால் அதையும் வாங்கி கொள்ளலாம். தவறு கிடையாது. வாங்கி வந்த அந்த வேரை மஞ்சள் தண்ணீரில் கழுவி நன்றாக தண்ணீரை உலரவைத்து, அதற்கு சாம்பிராணி தூபம் போட்டு அந்த வேரினை மூன்று நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு, பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

poojai

மூன்று நாட்கள் கழித்து விபூதியில் இருக்கும் அந்த வேரை எடுத்து குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, அந்த வேரை அப்படியே தாயத்தில் போட்டு மூடி குழந்தைகளது கழுத்திலோ இடுப்பிலோ கட்டி விட்டு விடலாம். குழந்தைகளை எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தாக்காது. குழந்தைக்கு கண் திருஷ்டியும் படாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன விஷயங்கள் அனைத்துமே நம் முன்னோர்களால் பின்பற்றி வந்ததுதான். காலப்போக்கில் அது மறைந்து விட்டது. உங்களுக்கு எது தேவையோ அதை நம்பிக்கையோடு செய்து பயன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -