ராசியே இல்லாத பெண்களின் கைகூட, ராசியாக மாறிவிடும். தினம்தோறும் சமையலறையில் இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் கையால் தொடுங்க.

women3
- Advertisement -

பேச்சு வழக்கில் நாம் பேசுவதுண்டு. இந்த பெண் ராசியான பெண். இந்த பெண்ணின் கையால் எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் அது பல மடங்காக பெருகும். இந்தப் பெண்ணின் கை ராசியே இல்லை. இந்த பெண்ணின் கையால் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது உடைந்து தான் போகுது. இந்த பெண் எதை செய்தாலும் அது தொட்ட காரியம் துலங்காது என்பார்கள். பொதுவான ஒரு கருத்து என்னவென்றால் யாருடைய மனதையும் புண்படுத்தும் படி நாம் பேசக்கூடாது. அவரவருடைய கெட்ட நேரம், நல்ல நேரம் அவரவர் செய்யக்கூடிய செயல்கள் நல்லதாக மாறுவதும் கெட்டதாக மாறுவதும். ஆகவே இப்படி அடுத்தவர்களுடைய மனதை புண்படுத்தும் படி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களை யாராவது ராசி இல்லாத பெண் என்று சொல்கிறார்கள் என்றால் உங்களுக்கான பரிகாரம் தான். உங்களை யாராவது இப்படி திட்டி விட்டால் அதற்காக ஒருபோதும் நீங்கள் வருத்தப்படவே கூடாது. ஒண்ணுமே செய்ய வேண்டாங்க. தினம் தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு இருக்கிறது அல்லவா. அந்த உப்பை தினம் தோறும் ஏதாவது ஒரு சமையலுக்கு நாம் பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அந்த கல் உப்பை எடுத்து சமையலுக்கு போடும்போது, போடும்போது உங்களுடைய கையால் கல் உப்பை எடுத்து உணவுப் பொருட்களில் போட்டு சமைக்க வேண்டும்.

- Advertisement -

பொதுவாக உப்பை எடுப்பதற்கு எல்லோரும் சின்ன அளவில் இருக்கும் ஸ்பூனை பயன்படுத்துவார்கள். சில பேர் கையால் உப்பை எடுத்து போடுவார்கள். குறிப்பாக கைராசி இல்லை முகராசி இல்லை என்று ஒதுக்கி வைக்க கூடிய பெண்களாக இருந்தால் தினமும் சமைக்கும்போது உங்களுடைய கையில் கல் உப்பை எடுத்து போட்டு சமைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். துரதிஷ்டம் உங்கள் கையை விட்டு சென்று விடும். கல் உப்பை தினம் தினம் கையில் எடுப்பவர்களுக்கு அவ்வளவு பவர் கிடைக்கும். இதை முயற்சி செய்து பாருங்கள்.

பிறகு உடலை பிடித்த தரித்திரம் நீங்க வேண்டும் என்றால் பெண்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பை கலந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சருமத்திற்கு எதுவும் ஆகாது. ஆரோக்கியத்திற்கு எதுவும் ஆகாது. அழகும் பறி போகாது. சிறிதளவு ஒரு ஸ்பூன் அளவு உப்பை எடுத்து குளிக்கின்ற தண்ணீரில் கலந்தால் போதும். அப்படி குளிக்கும் தண்ணீரில் கலக்குவதற்கு கல் உப்பை நீங்கள் எடுப்பதாக இருந்தாலும் கூட, உங்கள் கையைக் கொண்டு கல்லுப்பை எடுத்து தண்ணீரில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். ஸ்பூனை பயன்படுத்தாதீங்க. அளவை குறிப்பிடுவதற்காக தான் அங்கே ஸ்பூன் என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உப்பு கலந்த தண்ணீரை எடுத்து வழக்கம் போல குளித்துக் கொள்ளலாம். தலைக்குத்தான் குளிக்க வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. தரித்திரம் விலகுவதற்கு மேல் சொன்ன பரிகாரமே உங்களுக்கு ஒரு சில நாட்களில் நல்லதொரு பலனை கொடுக்கும்.

வீட்டில் செல்வ செழிப்பே இல்லை. கடன் தொல்லை பண பிரச்சனை போதிய வருமானம் இல்லை என்ற அளவில் கஷ்டங்கள் இருந்தால், உங்கள் வீட்டில் கல் உப்பு ஜாடையில் ஒரே ஒரு முழு கொட்டை பாக்கை மட்டும் போட்டு வையுங்கள். உப்புக்கு அடியில் இந்த கொட்டை பாக்கை போட்டு வைத்துவிட்டு மேலே உப்பை கொட்டி விடுங்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உள்ளே இருக்கும் கொட்டைப்பாக்கை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய பாக்கை மீண்டும் வைக்கலாம். கலிப்பாக்கு என்பது வேறு. பாதிப்பாக வெட்டி வெற்றிலை பாக்கில் வைப்பது கலிப்பாக்கு. அது இந்த பரிகாரத்திற்கு பயன்படாது.

இது உருண்டையாக மளிகை கடைகளில் கொட்டைப்பாக்கு என்று கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்து கொட்டைப்பாக்கை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். பரிகாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -