பெண்களிடம் இருக்கும் தரித்திரம் நீங்கி அவர்கள் கையில் பணம் அதிகம் புழங்க இந்த 3 விஷயங்களை செய்யலாமே!

cash-praying-girl-women
- Advertisement -

பெண்களுடைய கையில் அதிகம் பணம் புழங்கக் கூடிய காலம் வந்துவிட்டது. முன்பெல்லாம் பெண்கள் வீட்டில் சமையல் கட்டிலேயே முடங்கி கிடந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லோரும் ஆண்களுக்கு நிகராக, அதைக் காட்டிலும் மேலாகவே தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். இருப்பினும் அவர்கள் கையில் பணம் புழங்காமல் இருக்க அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளும் காரணமாக இருக்கலாம். இந்த தரித்திரங்கள் எல்லாம் நீங்கி பணம் அதிகம் புழங்க பெண்கள் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு குடும்பத்தில் பெண் இல்லை என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் சிதற ஆரம்பித்து விடும். அந்த குடும்பமே கடைசியில் தனித்தனியாக சிதறிப் போய் நிற்கும். இப்படி பல குடும்பங்களை நாம் பார்த்திருப்போம். குடும்பத்தில் பெண் ஆனவளே மகாலட்சுமியின் ஸ்ரூபமாக நின்று பொருளாதாரத்தையும், செல்வ வளத்தையும், குலத்தையும் கட்டி காக்கிறாள்.

- Advertisement -

அத்தகைய பெண்கள் கையில் அதிகம் பணம் புழங்க அவர்களுடைய தரித்திரம் நீங்க வேண்டும். இதற்கு அவர்கள் குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பசுந்தயிரை உடல் முழுக்க தடவி பின்னர் குளிக்கலாம். இது போல செய்து குளித்தால் உடலில் இருக்கக்கூடிய துஷ்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட சிந்தனைகள், தரித்திரங்கள், பீடைகள் அனைத்தும் ஒழியும் என்பது சாஸ்திர உண்மையாகும்.

சில குடும்பங்களில் பெண்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி சொல்லி அவர்களிடம் எதைப் பற்றிய விஷயங்களையும் கூறாமல் முடக்கி வைத்திருப்பார்கள். இத்தகைய பெண்கள் அவர்கள் அப்படி கூறுகிறார்கள் என்று முடங்கிக் கிடக்க கூடாது. அவர்கள் எதை தெரியாது என்று சொல்லி மட்டம் தட்டினார்களோ, அதையே தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இன்று நவீன யுகத்தில் எவ்வளவோ விஷயங்களை கையில் இருக்கும் மொபைல் ஃபோனிலேயே தெரிந்து கொள்ளலாம். எனவே உங்களுடைய திறமைகளை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சமையல் செய்தோமா, சாப்பிட்டோமா, தூங்கினோமா என்று இருக்கக் கூடாது.

- Advertisement -

சிறுக சிறுக உங்களுக்கு இந்த உலகம் எவ்வளவு பரந்து விரிந்துள்ளது. இதில் எவ்வளவு விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்களுடைய கருத்துகளையும் நீங்கள் உங்களை சார்ந்த ஆண்களுக்கு எடுத்து சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயர துவங்கும். தானாகவே உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும். இதனால் உங்களுடைய கைகளிலும் பணம் புழங்க துவங்கும். பெண்கள் சுய சம்பாத்தியத்தில் 100 ரூபாய் சம்பாதித்தாலும் அதன் மதிப்பு தனி தான்.

இதையும் படிக்கலாமே:
இனி வரவே வராது என நினைத்த பணம் கூட உடனே கைக்கு வர ஆல இலையை வைத்து இதை மட்டும் செய்து பாருங்கள். கொடுத்த கடன், வாரா கடன், இழந்த சொத்து அனைத்தையும் மீட்டு தரும் சக்தி வாய்ந்த வழிபாடு..

பெண்களுடைய ராசியின் படி அவர்கள் இடது கைகளில் வெள்ளி மோதிரம் அணிந்தால் அவர்களுக்கு பிடித்த தரித்திரங்கள் அனைத்தும் நீங்கி புதிய மாற்றங்கள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இவர்கள் எந்த விரலில் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் ஆனால் இடது கையில் மோதிரத்தை அணிவது சிறப்பம்சமாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலையை காட்டிலும் வெள்ளியின் விலை மலிவு தான் எனவே பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொண்டால் அவர்களுடைய கைகளில் பணம் புழங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

- Advertisement -