இனி வரவே வராது என நினைத்த பணம் கூட உடனே கைக்கு வர ஆல இலையை வைத்து இதை மட்டும் செய்து பாருங்கள். கொடுத்த கடன், வாரா கடன், இழந்த சொத்து அனைத்தையும் மீட்டு தரும் சக்தி வாய்ந்த வழிபாடு..

vinayagar cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அவசர தேவைக்கு பணத்தை வாங்கி சென்ற பின்பு அதை திருப்பித் தர இழுத்தடிப்பதும் சில நேரங்களில் வாங்கவே இல்லை என்று சாதிப்பதும் இன்று நாம் பல இடங்களில் கேள்விப்படும் ஒரு சம்பவம் தான். இது போல பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் இந்த ஒரு வழிபாட்டை செய்யும் போது கொடுத்த பணம் அனைத்தும் உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த பணம் வாரா கடன் அனைத்தும் திரும்ப பெற
இந்த வழிபாட்டை நாம் புதன்கிழமையில் அஸ்தம் நட்சத்திரம் வரும் வேளையில் தான் செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று காலையிலே எழுந்து குளித்து முடித்து உங்கள் பூஜை அறையில் அன்றைய தின பூஜைகளை முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஆல இலையை எடுத்து சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஆல இலையின் நான்கு மூலையிலும் மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சளை பன்னீர் ஊற்றி குழைத்த பிறகு அந்த மஞ்சலை அப்படியே பிள்ளையாராக பிடித்து இந்த ஆலம் இலையின் மேல் வைத்த பின் விநாயகருக்கு அருகம்புல்லை சொருகி வைத்து விடுங்கள். இதே போல் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக வெல்லத்தைப் பொடித்து போட்டு அதையும் விநாயகர் போல பிடித்து ஆலம் இலையில் வைத்து விடுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு நெய்வேத்தியம் மிகவும் முக்கியம். அதற்கு ஏழு பிடி கொழுக்கட்டை நெய்வேத்தியமாக வைப்பது அவசியம். அதை செய்து வைக்க முடியாதவர்கள் கொஞ்சமாக கொண்டைக்கடலை வைத்துக் கொள்ளலாம். இப்போது விநாயகருக்கு வெற்றிலை,பாக்கு, பூ, பழம் தேங்காய், ஊதுபத்தி, கற்பூரம் என நாம் ஒரு பூஜை எப்படி செய்வோமோ அதே போல இந்த மஞ்சளால் பிடித்து விநாயகருக்கும், வெல்லத்தால் பிடித்த விநாயகருக்கும் பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜையை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மூன்று நாட்கள் பூஜை செய்யும் போதும் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து படைக்க வேண்டும். மூன்றாவது நாள் பால் பாயாசம் செய்து வைத்து வணங்கிய பிறகு இந்த இலையை நகற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இலையில் இருக்கும் மஞ்சள் விநாயகர், வெல்ல விநாயகர் இரண்டையும் ஒரு வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி ஓடும் நீரில் விட்டு விட வேண்டும்.

இந்த மூன்று நாட்களில் ஆலம் இலை நன்றாக வாடி இருக்கும். இந்த இலையை எரித்து சாம்பலாக்கி அதை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளில் போட்டு விடுங்கள். விநாயகர் வழிபாடு செய்யும் இந்த மூன்று நாட்களிலும் உங்களிடம் யார் பணம் வாங்கியவர்களின் பெயரை சொல்லி அவர்கள் அந்த பணத்தை எனக்கு திருப்பி தர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டே பூஜையை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: இன்று வைகாசி முதல் நாள்! இன்றைய தினம் இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், நீங்கள் அந்த மகாலட்சுமி தாயை வீட்டிற்குள் அழைத்து வந்ததற்கு சமம்.

இந்த பூஜையை செய்த சில தினங்களுக்குள்ளாகவே உங்களிடம் கடன் வாங்கி திருப்பித் தரவே கூடாது என்று நினைத்தவர் கூட தானாக தேடி வந்து உங்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும். இந்த விநாயகர் பூஜை பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -