பெண்களின் மனதில் இருக்கும் இனம் புரியாத கவலையை போக்கும் கிராம்பு. எவ்வளவு குழப்பம் இருந்தாலும், தெளிவான முடிவை எடுப்பதற்கு இந்த ஒரு பரிகாரம் போதும்.

women
- Advertisement -

பெண்களின் மனது சில நேரங்களில், சில முடிவுகளை, தெளிவாக தைரியமாக எடுத்து விடும். ஆனால் சில நேரங்களில் அவர்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அதே சமயம் உடல் சோர்வும் வந்துவிடும். எப்போதெல்லாம் மனது கஷ்டப்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்முடைய உடலிலும் உபாதைகள் வந்து கொண்டே இருக்கும். மன கஷ்டம், பணக்கஷ்டம், உடல் சோர்வு, மந்தமான புத்தி, தேவையற்ற குழப்பங்கள் வரும்போது அதை சில பெண்கள் எதிர்கொண்டு துணிவோடு சமாளித்து விடுவார்கள். சில பெண்களால் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் நாள் முழுவதும் அழுது கொண்டு, எதையோ இழந்தது போலவே இருப்பார்கள்.

இப்படி குழப்பமான மனநிலையில் இருக்கும் போது தெளிவு பிறக்க செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிய, ஆன்மீக தகவல் ஒன்றை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். முதலில் பெரிய கஷ்டம், குழப்பம் என்று வருகிறது, இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்க வேண்டும் என்றால் அவசர அவசரமாக குழப்பத்தோடு ஒரு நிமிடத்தில், எந்த முடிவையும் எடுக்காதீங்க. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் முடிவு எடுக்கக் கூடிய அந்த தருணத்தை ஒரு பத்து நிமிடம் தள்ளிப் போட வேண்டும். குழப்பத்தில் நீங்கள் இருக்கும்போது கோபத்தில் இருக்கும்போது முதலில் கடைபிடிக்க வேண்டிய விஷயம் அமைதி.

- Advertisement -

ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து பத்து நிமிடம் கண்களை மூடி உங்களுக்கு விருப்பமான கடவுளின் பெயரை சொல்லி மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். கோபம் உச்சத்தில் இருக்கும் போது மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அதை நீங்கள் செய்துவிட்டால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். அப்போதும் உங்களால் உங்கள் மனதில் தெளிவு பிறக்கவில்லையா.

பெண்கள் மனதில் இருக்கும் குழப்பம் தீர பரிகாரம் – Pengal manathil irukum kulam theera
ஒரு சிறிய அகல் எடுத்துக்கோங்க. அதில் பச்சை கற்பூரம் சின்ன துண்டு போட்டுவிட்டு, அந்த நெருப்பில் 7 கிராம்புகளை போட்டு பொசுக்கி விடுங்கள். ஏழு கிராம்பும் அந்த நெருப்பில் எரிந்து பொசுங்கி ஒரு நல்ல வாசம் வெளிவரும். இந்த வாசத்தை சுவாசிக்கும் போது பெண்களுடைய மனது தானாக அமைதி அடையும். குழப்ப நிலையில் நீங்கள் இருந்தால் உங்களை தெளிவு படுத்தி பிரச்சனைக்கு உண்டான சரியான தீர்வை எடுக்க இந்த வாசம் உங்களுக்கு துணை புரியும்.

- Advertisement -

பச்சைக் கற்பூரத்திலிருந்து வெளிவரும் வாசமும், கிராம்பிலிருந்து வெளிவரும் வாசமும் எதிர்மறை ஆற்றலை அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த புகை உங்கள் வீடு முழுவதும் நிரம்பி விட்டால் போதும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் சரியாகிவிடும். கெட்ட சக்தி, கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், கண்ணுக்குத் தெரியாத துர் சக்திகள் என்று இவையெல்லாம் சேர்ந்துதானே உங்களை கஷ்டப்படுத்துகிறது. அதை எல்லாம் சரி செய்ய இந்த பரிகாரத்தை செய்து விட்டாலே போதும். உங்களுடைய குழப்பங்களுக்கு சரியான விடை கிடைத்து விடும்.

இதையும் படிக்கலாமே: உங்க தங்க நகை அடமானம் செல்லாமல் இருக்க, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், கண்ணாடியை இப்படி பயன்படுத்தினால் போதும், அதன் பிறகு நகை அடமானம் செல்ல வாய்ப்பே இல்லை.

ஒரு வீட்டினுடைய ஆணிவேர், தூண் என்றால் அது அந்த வீட்டின் பெண்கள் என்றே சொல்லலாம். அவர்கள் எப்போதும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். குழப்பத்தில் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் கணவர், குழந்தைகள், சமையலறை, பூஜை அறை, குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு என்ன தேவை என்று பல வேலைகளில் கவனம் செலுத்தக்கூடிய பெண்கள், எப்போதும் தெளிவாக அந்த மகாலட்சுமி போலத்தான் செயல்பட வேண்டும். சோர்ந்து போகக்கூடாது. அப்போதுதான் குடும்பம் சுபிட்சம் பெரும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -