பெண்கள் முகத்தில் இருக்கும் தரித்திரம் நீங்கி, வசீகரத் தோட்டத்தையும், முக அழகையும், பௌர்ணமி நிலவு போல பெறுவதற்கு இந்த தண்ணீரில் குளித்தாலே போதும்.

pournami-murugan
- Advertisement -

அழகு என்று சொன்னாலே அதை பெண்களின் வடிவமாகத்தான் நாம் எல்லோரும் பார்க்கின்றோம். அழகை உருவகப்படுத்த பெண்களை தவிர இந்த உலகத்தில், அழகுக்கு ஈடு இணையான வேறு ஒரு பொருள் கிடையவே கிடையாது. இந்த அழகு என்ற பொருள் முழுக்க முழுக்க யாருக்கு சொந்தம் தெரியுமா. அழகு என்று வர்ணிக்கப்பட்ட முதல் விஷயம் இந்த உலகத்தில் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா. ஆன்மீகத்தில் அழகு என்று முதன் முதலில் சொல்லப்பட்ட விஷயம் எது? பெண்கள் உடம்பில், முகத்தில் இருக்கும் தரித்திரம் விலகி, முகப்பொலிவையும் அழகான தோற்றத்தையும், அழகான நறுமணத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெற தண்ணீரில் எந்தெந்த பொருட்களை எல்லாம் சேர்த்து குளிக்க வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பெண்கள் அழகாக மாற ஆன்மீகம் சார்ந்த குறிப்பு:
அழகு என்பது நிறம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. அது கலை சம்பந்தப்பட்ட விஷயம். சில பேரை பார்க்கும்போதே வசீகர தோற்றத்தோடு அழகோடு இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெள்ளையாக இருக்க மாட்டார்கள். கலர் குறைவாக இருந்தாலும் அவர்களை பார்க்கும் போதே ஒரு வசீகரத்தன்மை நமக்கு இருக்கும். சில பேர் வெறும் வெள்ளையாக தான் இருப்பார்கள். முகத்தில் பொலிவு இருக்காது. லட்சுமி கடாட்சம் இருக்காது. இப்படி எந்த விதத்தில் உங்களுடைய அழகு குறைந்து இருந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த குறிப்பை பின்பற்றலாம்.

- Advertisement -

குறிப்பை தெரிந்து கொள்வதற்கு முன்பு நம்முடைய ஆன்மீகத்தில் அழகு என்பது எதைக் குறிக்கும் என்று தெரியுமா. அழகன் முருகன். அழகன் முருகனை தான் அழகு என்ற வார்த்தையை சொல்லி முதன் முதலில் வர்ணித்தார்கள். அழகு என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் முருகர். ஆகவே முருகப்பெருமானை நினைத்துதான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகின்றோம்.

இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் சோம்பு, அதிமதுரம், நன்னாரி, காய்ந்த புதினா இலைகள். இந்த பொருள் 4 பொருட்களையும் சம அளவில் எடுத்து வெயிலில் லேசாக காய வைத்து பொடி செய்து அரைத்து வைத்துக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் புதினா தவிர மற்ற மூன்று பொருட்களுமே பொடிக்காக கிடைக்கின்றது, அதை வாங்கி ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு அதில் காய்ந்த புதினா இலைகளை கலந்து வைத்துக் கொண்டாலும் சரி அது உங்களுடைய சௌகரியம். (சோம்புத்தூள், அதிமதுரப்பொடி, நன்னாரி பொடி, இந்த மூன்றும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவே நமக்கு கிடைக்கும்).

- Advertisement -

இந்த பொடியை தயார் செய்து வைத்து விட்டோம். இதற்கு முருகனின் ஆசிர்வாதத்தை பெற வைக்க வேண்டுமே. காரணம் அந்த முருகன் நினைத்தால் தான் நமக்கு அழகு கிடைக்கும். தயார் செய்த இந்த பொடியை பூஜை அறையில் வைத்து ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா, என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி உங்கள் உடம்பில் இருக்கும் தரித்திரம் விலக, முகம் பொலிவு பெற முருகனைப் போல் அழகைப் பெற வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இந்த பொடிக்கு ஒரு தெய்வீக ஆற்றல் கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு 33 ரூபாய் வைத்து இந்த வழிபாடு செய்தால் கடலளவு இருக்கும் பணப் பிரச்சினைகள் காணாமல் போவதுடன், வராத பணம் கூட உங்களைத் தேடி வந்தே தீரும்.

பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி இதை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பாட்டிலில் தயாராக இருக்கும் இந்த பொடியை தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்தால் வாசம் மிகுந்த ஒரு தீர்த்தம் நமக்கு கிடைத்திருக்கும். இதை குளிக்கின்ற தண்ணீரில் தினமும் ஊற்றி, குளித்து வர தேக தரித்திரம் விலகும், மேனி பளபளப்பாகும், லட்சுமி கடாட்சம் பிறக்கும், முகப்பொலிவு கிடைக்கும். அழகு எனக்கு குறைவாக இருக்கிறது என்று ஏக்கப் படக்கூடிய பெண்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்பை பின்பற்றலாம். பிறகு பாருங்கள் 48 நாட்கள் கழித்து தோற்றத்தில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். மேல் சொன்ன குறிப்பில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -