பெண்கள் இந்த ஒரு செயலை தினமும் செய்தால் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காதாம்! அந்த காலத்து டெக்னிக் ட்ரை பண்ணி பாருங்க.

pengal-flower-lakshmi
- Advertisement -

பெண்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் அந்த இல்லத்தில் எப்பொழுதும் சுபீட்சம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் வருமானத்தை கொடுப்பது யாராக இருந்தாலும், பெண்ணானவளே மகாலட்சுமியாக கருதப்படுவாள். எனவே பெண்கள் ஒரு வீட்டில் எப்பொழுதும் அழுது கொண்டு இருந்தால் அந்த வீட்டில் வறுமை தாண்டவம் ஆடும் என்பது நியதி. ஒரு இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் நிறைந்து இருக்க குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் மன நிறைவுடன் இருக்க வேண்டும். மனக்குறைவுடன் இருந்தால் குடும்பத்திலும் பிரச்சினைகள் குறையாமல் வந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் பொழுது பெண்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய இந்த ஒரு செயல் கேட்பதற்கே ஆச்சரியம் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் எல்லா பெண்களும் இதை செய்து வந்தனர் ஆனால் இன்று அது பாதியாக குறைந்துவிட்டது, பெண்களுடைய பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்கலாம். அப்படியான ஒரு விஷயத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பெண்களுடைய மனதில் இருக்கும் குறைகள் நீங்க, மன இறுக்கம் தளர்ந்து அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க இந்த ஒரு செயலை தினமும் செய்ய வேண்டும். முந்தைய காலங்களில் எல்லாம் திருமணமான பெண்கள், சுமங்கலி பெண்கள் அனைவருமே தலையில் பூ இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஒரு சிறு பூவாவது தலையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டு இருப்பார்கள். இதை மங்களகரமாகவும் அவர்கள் கருதி வந்தார்கள்.

- Advertisement -

வகுடு எடுத்து வாரி, நெற்றி பொட்டின் வகிட்டில் குங்குமம் இட்டு, தலை நிறைய பூ வைத்து தழைய தழைய புடவை கட்டி சிகப்பு நிற பொட்டு வைத்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு மன இறுக்கம் குறைவதாக பல சான்றுகள் கூறுகின்றன. எவ்வளவு பிரச்சனைகள் அவர்களிடம் வந்தாலும், அதை துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள். சோர்ந்து போகாமல் விடாப்பிடியாக, தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து எல்லாவற்றிலும் வென்று காட்டி, குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் அனுசரணையாக அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றலையும் பெண்கள் பெறுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் எப்பொழுதும் மன இறுக்கம் இல்லாமல் சரியான முடிவு எடுக்கும் தன்மையுடன் திகழ்கிறார்கள்.

பெண்கள் தலையில் பூச்சூடுவதால் நிறையவே நன்மைகள் உண்டாகிறது என்று அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. பெண்கள் விடாப்பிடியாக இருக்கும் சில விஷயங்களில் இருந்து மன மாற்றத்தை கொடுக்க தலையில் இருக்கும் இந்த வாசனை மிகுந்த மலரும் ஒரு காரணமாம். அது மட்டுமல்லாமல் பெண்கள் தலையில் பூ சூடுவதால் பிராண ஆற்றல் அதிகரித்து மனம் இலகுவாகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.

- Advertisement -

ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலை கொடுக்கக் கூடிய அற்புதமான சக்தி இந்த வாசனை மிகுந்த மலர்களுக்கு உண்டு. குறிப்பாக மல்லி, முல்லை, ஜாதி போன்ற வாசனை மிகுந்த மலர்களை பெண்கள் தினமும் சூடிக் கொண்டால் அவர்களுக்கு ஒரு விஷயத்தில் சரியான முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்குமாம். இதனால் குடும்பத்தை அல்லது நிர்வாகத்தை வழி நடத்தக்கூடிய ஆற்றல் அவர்களிடம் அதிகரிக்கிறது. இதனால் வரக்கூடிய பிரச்சினைகளும் பாதியாக குறைந்து விடுகிறது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு பூச்சூடல் என்பது ஒரு காரணமாக இருக்கிறது. தலை நிறைய பூவை வைத்துக் கொண்டிருந்தால் மனம் ஒருமுகப்பட்டு, இறை சிந்தனை அதிகரித்து இதனால் மகிழ்ச்சியும் உண்டாகிறது என்று நம்பப்படுகிறது. அதனால் தான் திருமணம் ஆன புதிதில் பெண்கள் தினமும் மல்லிகை பூ வைத்து எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் எப்பொழுதும் பெண்கள் தலையில் பூச்சூடுவதால் அனாவசிய சிந்தனைகளும் தவிர்க்கப்படுகிறது. எனவே தினமும் பூ வைத்து எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உங்கள் வீட்டுப் பெண்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -