மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெண்கள் தினமும் இதை மட்டும் செய்தலே போதும்.

pengal-flower-lakshmi
- Advertisement -

பொதுவாக நாம் பெண்களை மகாலட்சுமியின் மறு உருவம் என்று தான் கூறுவோம். அதனால் தான் சில பெண்களை பார்த்தவுடனே நல்ல லட்சுமி கடாச்சம் நிறைந்தவள் என்றும், நல்ல அழகான பெண்களை அப்படியே மஹாலக்ஷ்மி போல இருக்கிறாள் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமி வடிவத்தில் இந்த பூமியில் இருக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, தினமும் தலையில் பூ சூடி கொள்வது தான்.

ஆனால் இன்று நாகரிக வளர்ச்சியில் மாறிப்போன, மறைந்து போன பழக்களில் ஒன்று பெண்கள் தலையில் பூ சூடி கொள்வது. இப்போது எல்லாம் பெண்கள் யாரும் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. ஏன் தலைமுடியை பின்னுவது கூட இல்லை. இதனால் வீட்டிற்கு நல்லது இல்லை, இது ஒரு புறம் இருந்தாலும் முடியும் பாழாகிவிடும். நீங்கள் தலை முடியை எப்படி வேண்டுமென்றாலும் சீவிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் எப்படி வாரினாலும் தலையில் ஒரு கொத்து பூவாது வைக்க வேண்டும்.

- Advertisement -

இதை ஆன்மீக கருத்தாக மட்டும் பார்க்காமல், அறிவியல் பூர்வமாகவும் பெண்கள் தலையில் பூ வைப்பதில் நன்மை இருக்கிறது என கூறியிருக்கிறார்கள். தலையில் பூ வைப்பதென்றால் அதையும் ஏதோ கடமைக்காக வைக்க கூடாது. தலைக்கு மேலாக இல்லாமலும், அடி முடியிலும் இல்லாமல், பின் மண்டை கழுத்து அருகே தான் பூ வைக்க வேண்டும். ஏனென்றால் அங்கு தான் கூம்பு சுரப்பி (Pineal gland) இருக்கிறது.

இது நாம் தலையில் பூ வைக்கும் போது அந்த பூவின் மனமானது, இந்த சுரப்பியின் வழியாக நம் உடலுக்குள் சென்று நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், வைத்திருக்கும். ஆகையால் தான் பெரியவர்கள் பெண்கள் கட்டாயமாக தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இது பெண்களின் மன உளைச்சலை பெருமளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

- Advertisement -

இது அறிவியல் பூர்வமான உண்மை. ஆனால் ஆன்மீகத்தில் இந்த மலர்களை தலையில் தினமும் சூடி கொள்வதால் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றாலே போதும். இதற்கு வேறொன்றும் கூறத் தேவையில்லை. மகாலட்சுமி அருள் கிடைத்தது என்றாலே நம் வாழ்க்கை அத்தனை சௌபாக்கியங்களும் கிடைத்தது என்று அர்த்தம்.

அதுவும் வாசனை மிகுந்த மலர்களாக இருந்தால் மிகவும் நல்லது. பூ என்றால் இதை தான் வைக்க வேண்டும் என்று இல்லை. இறைவன் படைத்த அனைத்துமே பூஜைக்கும் பயன்பாட்டிற்க்கும் உரியதுதான். ஆனால் வாசனையை அதிகம் உள்ள பூக்கள் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் விருப்பம். எனில் அதனாலயே அவர்களை வாசத்திலே வாசம் செய்பவள் என்று குறிப்பிடுவார்கள்.

எனவே முடிந்த அளவுக்கு நல்ல மனமான மலர்களை சூடிக் கொள்ளுங்கள். இப்படி தினம் தோறும் சிறிதாவது பூக்களை சூடிக் கொள்ளும் பெண்களிடத்தில் மஹாலக்ஷ்மி நிரந்தரம்மாக குடிக்கொண்டு இருப்பாள். இந்த மலர்கள் கிடைக்காத நேரத்தில் பன்னீர் ரோஸ் போன்ற மலர்களை எப்போதும் கிடைக்கும். விலையும் குறைவு. இதையாவது கட்டாயமாக சூடிக்கொள்ளுங்கள்.

- Advertisement -