பெண்கள் இந்த 10 தவறுகளை செய்யாவிட்டால் அவர்கள் கையில் பணம் அதிகம் புழங்குமாம்! மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்குமாம் தெரியுமா?

lakshmi-cash
- Advertisement -

பெண்கள் இயல்பாகவே மகாலட்சுமியின் அம்சமாகத்தான் இருக்கின்றனர். இவர்களுடைய சொல்லும், செயலும், குடும்பம் நடத்தும் முறையும் அந்த பெண்ணிற்கு மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்திற்கே மகாலட்சுமியின் அருளை பெற்று கொடுக்கும் என்பதில் தான் சூட்சமம் நிரம்பியுள்ளது. எனவே ஒரு குடும்பத்தில் பெண் இந்த 10 தவறுகளை செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கிறது. அப்படியான தவறுகள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பெண்கள் முதலில் விளக்கு வைத்த பின்பு அழக்கூடாது. காலை மாலையும் இருவேளை விளக்கேற்றி வைப்பது நன்மை தரும். அப்படி ஏற்றிய பின்பு என்ன தான் உள அளவில் கஷ்டம் இருந்தாலும் கூட அவருடைய கண்களில் கண்ணீர் வரக்கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும். பெண் என்பவள் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறது. திருமணம் ஆன பெண்களாக இருந்தால் வளையல் இல்லாமல் ஒருவருக்கு உணவு பரிமாறக்கூடாது. இப்படி செய்வதால் கையில் காசு தங்குவது குறையுமாம்.

- Advertisement -

விளக்கு வைக்கும் பொழுது கைகளில் கட்டாயம் வளையல் அணிந்திருக்க வேண்டும். வளையல் இல்லாமல் விளக்கு ஏற்றினால் பலன் ஒன்றும் இல்லை என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதே போல விளக்கு வைத்த பின்பு போட்டுக் கொண்டிருக்கும் வளையலை எக்காரணம் கொண்டும் கழட்டி வைக்கக் கூடாது. எப்பொழுதும் வீட்டில் வளையல் சத்தம் கேட்பது பணவரவை அதிகரிக்க செய்யும். காய்கறி மற்றும் சாப்பாட்டை பரிமாறும் பொழுது கைகளில் தவறியும் எடுத்து போடக்கூடாது. இது வறுமையை உண்டாக்கும். அன்ன கரண்டியால் சாதத்தை பரிமாறுவது அன்னபூரணியின் அருளை பெற்று தரும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டு பெண்கள் வெளியில் சென்றால் இரவு எங்கேயும் தங்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும். இதனால் தான் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு பெண்கள் செல்லும் பொழுது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அனுப்பப்படுவது இல்லை. வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியேறி விடுவார் என்பது இதன் தாத்பரியம் ஆகும். பெண் குழந்தைகளை மகாலட்சுமியாக அக்காலம் முதல் இக்காலம் வரை பாவிக்கின்றனர்.

- Advertisement -

பெண்கள் தலையை ஒருமுறை விரித்து விட்டால் அதை பின்னி முடிக்கும் வரை எங்கேயும் அமரக்கூடாது. தலையை விரித்த கோலத்துடன் அமர்ந்தால் அவர்களுடைய கைகளில் காசு தங்குவது கிடையாது. மகாலட்சுமி அவர்களுக்கு அனுக்கிரகம் செய்வது கிடையாது. சுமங்கலி பெண்கள் மட்டும் அல்லாமல் கன்னி பெண்களும் சாந்து பொட்டினை வைத்தால் கையில் பணம் அதிகம் சேரும். குங்குமம் பொட்டு வைக்கும் பொழுது கன்னிப்பெண்கள் வகிட்டில் வைக்கக் கூடாது. இது மகா பாவம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
இரவில் இதை செய்துவிட்டு படுத்தால் நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் எப்படியும் கிடைத்து விடுமாம் தெரியுமா? முன்னோர் ஆசி பெற எளிய வழிபாடு!

பெண்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் காலை அல்லது மாலையில் விளக்கேற்றும் பொழுது எதிர்மறையான வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது. முடியாது, கிடைக்காது, நடக்காது, இல்லை என்பது போன்ற வார்த்தைகளை பிரயோகித்தால் அவர்களுடைய கையில் பணம் புழங்குவது குறையும். மேலும் இவர்கள் அமங்கல சொற்களையும், அசுப வார்த்தைகளையும் கூட பயன்படுத்தக்கூடாது. நல்ல நேரத்தில் மட்டும் அல்ல, எப்பொழுதும் இவ்வார்த்தைகளை பெண்கள் பிரயோகிக்காமல் இருந்தால் மகாலட்சுமி உங்களிடம் நிரந்தரமாக இருப்பாள்.

- Advertisement -