இரவில் இதை செய்துவிட்டு படுத்தால் நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் எப்படியும் கிடைத்து விடுமாம் தெரியுமா? முன்னோர் ஆசி பெற எளிய வழிபாடு!

pot-panai-pithru
- Advertisement -

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு முன்னோர்களுடைய ஆசீர்வாதமும் முக்கியமாக இருக்கிறது. வழிவழியாக சந்ததியினருக்கு நல்லவற்றை மட்டுமே அருளும் குணம் கொண்டவர்கள் இவர்கள். முன்னோர்களை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அந்த அளவிற்கு நற்பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய இந்த முன்னோர்களுடைய ஆசீர்வாதத்தை எப்படி எளிதாக பெறுவது? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் சொந்த இரத்த உறவினர்கள் யாராவது இறந்து விட்டால் அவர்களுக்கு அவர்களுடைய சந்ததியினர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் திதி கொடுத்து அவர்களுடைய ஆத்மாவை சாந்திப்படுத்தி வருகின்றனர். இப்படி ஒவ்வொரு வருடமும் செய்ய முடியாதவர்கள் பித்ரு தோஷங்களை அனுபவிக்கின்றனர். பித்ரு தோஷத்திலிருந்து நிவாரணம் பெறவும், முன்னோர்களுடைய ஆசீர்வாதத்தை மீண்டும் நாம் அடையவும் இந்த எளிய விஷயத்தை செய்து வரலாம்.

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் தவறாமல் திதி கொடுத்து முன்னோர்களை நினைத்து, அவர்களை தெய்வமாக பாவித்து எனக்கு இது வேண்டும் என்று கேட்டால் அது கண்டிப்பாக அவர்கள் நமக்காக பெற்று தருவார்கள் என்பது ஐதீகம். இவர்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் வறுமை என்பதும், தோல்வி என்பதும் இருப்பதில்லை. வேண்டிய வரங்களை அருளக்கூடிய சக்தி தெய்வங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ முன்னோர்களுக்கு உண்டு என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனவே தான் முன்னோர்கள் வழிபாடு ரொம்பவும் முக்கியத்துவம்.

தொடர்ந்து இது போல திதி கொடுக்க முடியாதவர்கள் அல்லது குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் துன்புறுபவர்கள், கேட்டது கிடைக்கவில்லையே நினைத்தது நடக்கவில்லை என்று புலம்புபவர்கள், தோல்வி மேல் தோல்வியை சந்திப்பவர்கள், முன்னேற்றத்தில் முட்டுக்கட்டை இருப்பவர்கள், குடும்பம் வறுமையை நோக்கி பயணிப்பவர்கள், தொடர் சறுக்கல்களை எதிர்கொள்பவர்கள் இந்த முன்னோர்கள் வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

ரொம்ப எளிதாக செய்யக் கூடிய இந்த வழிபாட்டின் மூலம் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம். தினமும் நீங்கள் இரவு தூங்கும் பொழுது ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இதை வீட்டிற்கு வெளியே வாசலில் ஏதாவது ஒரு மூலையில் வைத்துவிட்டு பின்னர் நீங்கள் கதவை தாழிட்டு உறங்க செல்லலாம். காலையில் வந்து பார்த்தால் அந்த தண்ணீரின் அளவு கண்டிப்பாக சிறிதளவு குறைந்திருக்கும். நீங்கள் வைக்கும் தண்ணீரை சிறிய மண்பானையில் கூட வைக்கலாம். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் நீங்கள் முன்னோர்களை நினைத்து ஒரு சொம்பு தண்ணீர் வைத்து விட்டு பின் தூங்க சென்றால் அவர்கள் ஆசீர்வாதம் உங்களுக்கு உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கி ராஜ போக வாழ்க்கை வாழ்வது உறுதி.

இரவில் நம்முடைய முன்னோர்கள், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் போன்ற இறந்தவர்கள் நம் வீட்டை சுற்றி தான் நடமாடி கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் வைப்பதன் மூலம் அவர்களை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவிக்கிறோம். நம்முடைய கஷ்டங்களை கண்டு தகித்துக் கொண்டிருக்கும் அவர்களுடைய ஆத்மா இந்த தண்ணீரை பருகி சாந்தி அடையுமாம். இதனால் நாம் வேண்டிய வரங்களை அவர்கள் நிறைவேற்றி கொடுப்பார்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் ஒரு சொம்பு தண்ணீரில் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

- Advertisement -