பெண்கள் மற்றவர்களை பார்த்து செய்யும் இந்த 2 விஷயங்கள் உங்களுக்கே எதிர்வினையாக திரும்பும் தெரியுமா?

thirusti-women
- Advertisement -

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல பெண்கள் பலரும் நடந்து கொள்வது நம் கண்முன்னே சில இடங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆணோ! பெண்ணோ! இந்த சில விஷயங்களை செய்யும் பொழுது அது அவர்களுக்கே எதிர்வினையாக திரும்பும். பிறகு ஏன் பெண் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம்! இந்த சில தவறான விஷயங்களை ஆண்கள் செய்வதை விட, பெண்கள் அதிகமாக செய்கின்றனர். அவர்களை அறியாமலேயே செய்யும் இந்த தவறுகள் அவர்களுக்கே பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்ன விஷயங்கள் அது? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

women1

பெண்கள் மற்ற பெண்களை பார்த்து செய்யக் கூடிய இந்த விஷயங்கள் மிகவும் தவறானது. இதை சில ஆண்களும் கூட செய்வது தான் விசித்திரமாக இருக்கும். அருகருகே ஒரு வீட்டில் இருப்பவர்கள் புதிதாக ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிட்டால் போதும் அது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கண் பட்டுவிடுமோ என்று பயந்து தான் ஆக வேண்டி இருக்கும். கண் திருஷ்டி என்பது அந்த அளவிற்கு மிகவும் பொல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

நாம் ஆசையாக புதிதாக வாங்கும் நகை, பொருள் எதுவாக இருந்தாலும் அதை அடுத்தவர்களிடம் காண்பிக்க வேண்டும் என்கிற ஆவல் கொள்வோம். ஆனால் அது அவசியம் இல்லை என்பது தான் உண்மை. அப்படி காண்பிப்பதால் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி அதில் ஏற்பட்டு விடுகிறது. எவ்வளவு அழகாக இருக்கிறது! நம்மால் இதை வாங்க முடியவில்லையே! என்று ஆழ் மனதில் நம்மை அறியாமல் நினைக்கும் இந்த விஷயம் அவர்களை மட்டுமல்ல, நம்மையும் சேர்த்து தான் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.

kadan

நம்மிடம் எது இருக்கிறதோ! அதை வைத்து தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். அடுத்தவர்களிடம் என்ன இருக்கிறது? என்பதை ஆராய ஆரம்பித்தால் நம்முடைய நிம்மதி பறிபோய் விடும். ஆடம்பர விஷயங்கள் எதுவுமே நமக்கு தேவையற்றவை தான். ஆனால் அடுத்தவர்களின் திருப்திக்கு நாம் நம்முடைய பணத்தை செலவிட்டு கொண்டிருக்கிறோம். அவர்களிடம் இருக்கிறது, நம்மிடமும் இருக்க வேண்டும் என்கிற இந்த தீய எண்ணம் நம்மை பெரும் கடனாளியாக கூட மாற்றும் அபாயம் உண்டு.

- Advertisement -

ஒருவர் வெளியில் செல்லும் பொழுது பக்கத்து வீடு, எதிர் வீடு என்று வெளியில் வாசலில் அமர்ந்திருக்கும் பெண்கள் அவர்களையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படி வெளியில் புறப்படுபவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தால் அதுவும் கண் திருஷ்டி தான். அதுவும் புதுமண தம்பதிகளை இவ்வாறு பார்ப்பது மிகவும் தவறானது. கண்கள் என்றால் பார்க்க தான் செய்யும் என்று சுலபமாக கூறி விடலாம், ஆனால் இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் இந்த பாவத்தால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல! நீங்களும் தான்.

thirusti-lemon

அடுத்தவர்களை பார்த்து பொறாமை படுவது, பொல்லாத கண் திருஷ்டியை கொடுப்பது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு அதன் வினையில் பங்கு உண்டு எனவே அவர்களுக்கும் அது ஒரு நாள் வந்து சேரும். எனவே கூடுமானவரை ஒருவர் வெளியில் செல்லும் பொழுது அவர்களை பார்பதை தவிர்ப்பது நல்லது. அதே போல உங்களிடம் யாராவது எதையாவது காண்பித்தால் உடனே அதை நீங்களும் வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுடைய மகிழ்ச்சியில் நீங்களும் மனமுவந்து பங்கு கொள்ளலாம், இதனால் உறவு பலப்படும், நன்மைகள் நடக்கும்.

- Advertisement -