வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் பணத்தை இப்படி செலவு செய்து பாருங்கள். செலவு செய்த பணத்திற்கு இரட்டிப்பாக உங்கள் கைக்கு பணம் வந்து சேரும்.

thinking-cash
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் எப்போதுமே சேமிப்பு இருக்க வேண்டும். ஆண்கள் வேண்டுமென்றால் பணத்தை தண்ணீர் போல செலவழிக்கலாம். ஆனால் வீட்டுப் பெண்களுக்கு பொறுப்பு கட்டாயம் தேவை. பெண்களாகிய நீங்கள் உங்கள் கையில் இருக்கும் பணத்தை எப்படி வைத்து, எந்த திசையில் வைத்து எப்படி செலவு செய்ய வேண்டும், என்பதைப் பற்றியும், வீட்டில் சேமிக்கக்கூடிய பணத்தை எந்த இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

முதலில் சிறிய அளவில் ஒரு மண் பானையை நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த மண் பானையை கிழக்கு திசையில் வைத்துவிடுங்கள். அதாவது உங்கள் வீட்டில் கிழக்கு பக்கமாக இருக்கும் அலமாரியில் கூட வைத்துக்கொள்ளலாம். தினம்தோறும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் அல்லவா. அதற்கு செலவுக்கான பணம் உங்கள் கையில் இருக்கும் அல்லவா. அந்த பணத்தை அந்த மண் பானையில் வைத்து, எடுத்து தினம்தோறும் செலவு செய்யவேண்டும்.

- Advertisement -

குறிப்பாக கிழக்கு பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் அந்த மண்பானையில் நிரம்ப சிலரை காசுகளும் இருக்க வேண்டும். அதன் மேலே ரூபாய் நோட்டுகளும் இருக்கலாம். அந்த பணத்தை தினந்தோறும் புழங்க எடுத்து பயன்படுத்தலாம். இப்படி செலவு செய்தால் நீங்கள் செலவு செய்யக்கூடிய பணம் சீக்கிரமே இரட்டிப்பு மடங்கு உங்கள் கைக்கு வந்து சேரும்.

women2

அடுத்தபடியாக சேமிப்பதற்கு என்ன செய்ய வேண்டும். வடக்கு பக்கத்தில் ஒரு பண பெட்டியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தில் சேமிப்பு தொகையை சேமித்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் வடக்குப் பக்கத்தில் வீடு இருந்தால் இன்னும் சவுகர்யம் தான்.  வடக்கு பக்கத்தில் வைத்த காசை எடுத்து அடிக்கடி செலவு பண்ண கூடாது. தேவைக்கு ஏற்ப மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ மொத்தமாக தான் அந்த இடத்தில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும். அடிக்கடி அந்த பணம் வடக்கு திசையிலிருந்து நகர கூடாது. அடிக்கடி செலவு செய்யப் போகும் காசை தான் நாம் கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கின்றோமே.

- Advertisement -

அவ்வளவு தாங்க. இரண்டே விஷயம்தான். இந்த இரண்டு விஷயங்களை நம்பிக்கையோடு உங்களுடைய வீட்டில் தினம்தோறும் கடைபிடித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் கையில் இருக்கும் பண இருப்பில் நல்ல வித்தியாசம் தெரியும். சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்லும்.

women3

உங்களுடைய கைகளால் அடுத்தவர்களுக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் சரி, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் சரி, அது அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொடுக்க வேண்டும். நம்மிடம் இருந்து பணம் வெளியே செல்கிறதே என்று வருத்தத்தோடு கொடுக்கக்கூடாது. ஒரு ரூபாய் பணம் நம் கைக்கு வருகின்றது என்றாலும் அதை நினைத்து பெருமிதத்தோடு சந்தோஷப்பட்டு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள்.

பிரபஞ்சம் உங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க தொடங்கிவிடும். முயற்சி செய்து தான் பாருங்களேன். இதில் நஷ்டம் எதுவுமே கிடையாது. ஆனால், லாபத்தை கொட்டிக் கொடுக்கும் ஒரு அற்புதமான சூட்சுமம் இதில் அடங்கியுள்ளது. சொன்னால் அது உங்களுக்கு புரியாது. மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நீங்களே உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -