வீட்டில் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருவதற்கு பெண்கள் செய்யக்கூடிய இந்த தவறுகளும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் செய்யவே கூடாத 5 தவறுகள்.

women3
- Advertisement -

பெண்கள் வீட்டில் மகாலட்சுமி ஸ்வரூபத்தை கொண்டவர்கள். பெண்கள் சில விஷயங்களை இப்படித்தான் செய்ய வேண்டும். இப்படி செய்யக் கூடாது என்று அந்தக் காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் வரையறை செய்து வைத்துள்ளார்கள். ஆனால் காலப்போக்கில் அது எல்லாம் மூடநம்பிக்கை என்று நாம் மாற்றி விட்டோம். நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைத்துள்ள சின்ன சின்ன சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்னால், பெரிய அளவில் அறிவியல் ரீதியான உண்மைகள் மறைக்கப்பட்டு தான் இருக்கின்றது. ஆக முன்னோர் சொல்படி கேட்டு நடப்பது நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் நன்மையை மட்டுமே கொடுக்கும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவினை தொடங்குவோம்.

women6

பெண்கள் தலைவிரி கோலத்தோடு பூஜை அறையில் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. அதாவது பூஜை சம்பந்தப்பட்ட வேலையை செய்வதாக இருந்தால் தலை முடியை பின்னிக்கொண்டு அல்லது ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கொண்டுதான் பூஜை சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட வேண்டும். தலைவிரி கோலத்தோடு வீட்டு நிலை வாசல் படியை பெண்கள் தாண்டக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முடிந்தவரை பெண்கள் புடவை கட்டிக்கொண்டு பூஜை புனஸ்காரங்களை செய்வது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். முடியாதவர்கள் உங்களால் உடுத்திக் கொள்ள முடிந்த நாகரீகமான மற்ற ஆடையை அணிந்து கொள்ளலாம். நைட்டி என்று சொல்லப்படும் இரவு உடையை மட்டும் பூஜை செய்யும் போது அணிந்து கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது நம் வீட்டிற்கு சுபிட்சத்தை கொடுக்காது.

child

தாய் தன்னுடைய பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிப்பது வழக்கமான ஒரு விஷயம் தான். அம்மா தனக்கு பிறந்த மகனின் தலையில் கொட்ட கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. கோபம் வரும்போது சில தாய்மார்கள் தன்னுடைய மகனை தலையில் கொட்டி திருத்து வார்கள். அப்படி ஒரு தாய் தன்னுடைய மகனுடைய தலையில் கொட்டாதீங்க. இதன்மூலம் வீட்டில் தரித்திரம் பிடிக்குமாம். தலையில் கொட்டாமல் வேறு ஏதாவது ஒரு இடத்தில் அடித்து திருத்துங்கள்.

- Advertisement -

இதேபோல் தாய் தன்னுடைய மகளை கன்னத்தில் ஆராயக் கூடாது என்பது சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பெண் குழந்தை தவறு செய்தால் கன்னத்தில் அடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

women8

இப்போதெல்லாம் கணவனை மனைவி அடிப்பது என்பது ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் மனைவி தன்னுடைய கணவரின் பிட்டம் என்று சொல்லப்படும் பின்பக்கத்தை விளையாட்டிற்காக கூட தட்டக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்களின் கைகளில் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள். ஆண்களின் பின் பக்கத்தில் மூதேவி வாசம் செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. ஆக பெண்களின் கை ஆண்களின் பிட்டத்தில் படும்போது, அதாவது அடிக்கும்போது விளையாட்டாக தட்டும் போதோ, அல்லது அந்த இடத்தில் அடுக்கும் போதோ அதன்மூலம் வீட்டில் தரித்திரம் உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -