பெண்கள் கையால் இந்த மாலையை கட்டி நிலை வாசலில் போட்டால், மனதில் நினைத்தது அப்படியே நடக்கும்‌.

amman5
- Advertisement -

பெண்களின் மனதில் வெளியில் சொல்ல முடியாத ஆசைகளும் வேண்டுதலும் நிறைய இருக்கும். எல்லா விஷயங்களையும் வெளியில் சொல்ல முடியாது. நெருங்கிய நண்பர்கள், அம்மா அப்பா உடன் பிறந்தவர்கள் என்று கூட பெண்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களை அப்படிப்பட்ட ஆசைகளை, பெண்கள் அந்த இறைவனிடத்தில் தான் சொல்ல முடியும்.

இறைவனிடம் சொல்லுவதற்கும் ஒரு சூட்சமமான முறை உள்ளது. பெண்கள் இந்த மாலையை மட்டும் அவர்களுடைய கையால் கட்டி நிலை வாசலில் போட்டு வேண்டிக் கொண்டால் போதும். அவர்களுடைய மனதில் நினைத்தது அப்படியே நடக்கும். அந்த ஆசை அப்படியே நிறைவேறும். அந்த மாலையை எப்படி தொடுப்பது, எந்தெந்த கிழமையில் நிலை வாசலில் போடுவது, எப்படி முறையாக வேண்டுதலை வைப்பது, என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

பெண்களின் வேண்டுதல் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை வீட்டில் பூஜை அறையில் எப்போது விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறீர்களோ, அப்போது பூஜை அறையில், நீங்கள் செய்யக்கூடிய பூஜையை நிறைவு செய்துவிட்டு இந்த மாலையை உங்கள் கையால் தொடுக்க தொடங்க வேண்டும். மஞ்சள் நிற சாமந்திப்பூ, துளசி இலை, இந்த இரண்டு பூக்கள் உங்களுக்கு தேவை.

மஞ்சள் நிற நூல் அல்லது வாழைநார் எது கிடைத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சாமந்திப்பூ, ஒரு துளசி இலை என்று மாற்றி மாற்றி வைத்து உங்கள் கையால் பூக்களை தொடுக்க வேண்டும். மனதார குலதெய்வத்திடம் உங்களுடைய வேண்டுதல் என்னவோ, மனதில் இருக்கும் ஆசை என்னவோ அதை சொல்லி இந்த பூக்களை தொடுத்து எடுத்துக்கொண்டு போய் நிலை வாசல் படியில் மாட்டி விட்டு விடுங்கள். அடுத்த நாள் இந்த பூ வாடியதும் நிலை வாசலில் இருந்து எடுத்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கால் படாத இடத்தில் அந்த பூக்களை போட்டு விடுங்கள்.

- Advertisement -

இதே போல தொடர்ந்து உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை குலதெய்வத்திடம் சொல்லி பூக்களை மாலையாக தொடுத்து நிலை வாசலில் போட்டு குலதெய்வத்தை வேண்டிக் கொண்டால் உங்கள் மனதில் வைத்த வேண்டுதல் நிச்சயம் கூடிய சீக்கிரம் நிறைவேறும்.

பெண்களுக்கு எத்தனையோ வேண்டுதல் இருக்கும். (திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்). பெண்களுக்கும் எத்தனையோ கனவுகள் இருக்கும். அந்த கனவு வேண்டுதல் தங்களுடைய குடும்பத்திற்காகவும் இருக்கும். தனக்காகவும் இருக்கும். பிள்ளைக்கு திருமணம் நடக்க, அல்லது நீங்களே திருமணத்திற்கு பிறகு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவர், விரும்பிய நபர் கணவனாக கிடைக்க வேண்டும் என்றும் பரிகாரத்தை செய்யலாம்.  இப்படி எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு இது ஒரு எளிமையான பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: வெள்ளி செவ்வாய்கிழமையில் மட்டும் இந்த தண்ணீரை உங்க வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். பணம் வரும் திசை தெரியாமல் அசுர வேகத்தில் உங்களை வந்தடைவது உறுதி.

இதே போல செவ்வரளி பூக்களை உங்கள் கைகளால் தொடுத்து, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று அந்த அம்மனுக்கு மாலையாக சூட்ட சொல்லுங்கள். அந்த அம்பாளிடமும் உங்களுடைய கோரிக்கையை மனமுருகி சொல்லுங்கள். இரண்டு விளக்கு ஏற்றி வையுங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் உங்கள் மனதில் நினைத்தது நிறைவேறும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -