ஜோதிடத்தின் படி பெண்கள் எப்படி தங்களை அழகுப்படுத்திக் கொண்டால் பெரிய அளவில் வெற்றி காணலாம்?

sukiran
- Advertisement -

பெண்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் வெற்றி காண வேண்டும் என்றால், அவர்கள் ஜோதிடத்தின் அடிப்படையில் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும். என்னென்ன விஷயங்களை பின்பற்றக் கூடாது. என்பதை பற்றிய சின்ன சின்ன ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் எல்லாமே பிரபல ஜோதிடர்களால் சொல்லப்படவை தான். இதை பின்பற்றும்போது நிச்சயம் ஒரு பெண்ணுக்கு பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

பெண்கள் வாழ்க்கையில் பிரம்மாண்ட வெற்றி அடைய

சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே காலையில் எழுந்து குளிக்க கூடிய பெண் வாழ்க்கையில் நிச்சயம் பிரம்மாண்டமான வெற்றியை அடைவாள். இது எங்க எல்லோருக்கும் தெரியும். அடுத்தடுத்து வரக்கூடிய குறிப்புகள் எல்லாமும் இப்படித்தான் இருக்குமோ என்று யோசித்து படிக்காமல் போயிடாதீங்க. நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்குது. எத்தனை விஷயம் சொன்னாலும் முதல் விஷயம் இதுதான். காலையில் எழுந்து குளிக்க கூடிய பெண்ணுக்கு வெற்றி நிச்சயம்.

பகல் நேரத்தில் இரவு ஆடை என்று சொல்லப்படும் நைட்டி உடுத்தக் கூடாது. புடவை அணியும் பெண்கள், புடவைக்கு கான்ட்ராஸ்ட் ஆன கலரில் ஜாக்கெட் அணிந்து கொண்டால், அந்த பெண்ணுக்கு நிச்சயம் பிரம்மாண்டமான வெற்றி கிடைக்கும். புடவையும் ரவிக்கை துணியும் ஒரே கலரில் அணியாதிங்க. புடவை எடுக்கும்போது சேர்த்து ரவிக்கை துணியை காண்ட்ராஸ்ட் கலரில் எடுக்கும்போது, பெண்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

- Advertisement -

இப்படி கான்ட்ராஸ்ட் ஆன கலரில் பிளவுஸ் போட்டு ஒன் ஃபிலிட்டில் புடவை கட்டும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான வெற்றி கிடைக்கும். நிறைய பெண்கள் இந்த முந்தானையை ஒரு முனையை மட்டும் ரவிக்கை துணியோடு பின் போட்டுவிட்டு அப்படியே புடவை கட்டி நடந்து வரும் போது, பார்த்தீர்கள் என்றால் கம்பீரமாக தெரிவார்கள். அதுவும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு வெற்றி தான்.

எங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது என்பவர்கள் கட்டாயமாக வைரத்தில் கம்மல் அணிவது பெண்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்கும். வைர மூக்குத்தியாவது ஒரு சின்ன கல் வைத்து அணிந்து கொள்வது நிச்சயம் பெண்களுக்கு வெற்றியை தேடி தரும். மிக மிக முக்கியமான விஷயம். பெண்கள் தங்களுடைய பெயரை ஒரே ஒரு பெயராக வைத்துக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

உதாரணத்திற்கு இனிஷியல் போட்டு, உங்களுடைய பெயரை எழுதினால், கூடவே உங்களுடைய அப்பா பெயரையோ அல்லது கணவர் பெயரையோ சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இப்போதெல்லாம் பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் வாயில் நுழையாத பெயரை வைக்கிறார்கள். அப்படி புரியாத பெயரை பெண் குழந்தைகளுக்கு வைக்காதீங்க.

அதேபோல பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும், அந்த பொட்டுக்கு கீழே இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வாசம் நிறைந்த குங்குமத்தை வைப்பது சுக்கிரனின் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. இதை செய்தால் ஒரு பெண்ணுக்கு நல்ல பண வசியம் ஏற்படும். அதுவும் ஒரு பெண்ணுக்கு உரிய பிரம்மாண்டமான வெற்றிதான்.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனைகள் யாவும் தீர சனிக்கிழமை அன்று இதில் எழுதி எரித்து விடுங்கள்.

இப்படி மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பெண்கள் ஜோதிடத்தின் அடிப்படையிலும், ஆன்மீகத்தின் அடிப்படையிலும் பின்பற்றும் போது அவர்கள் பிரம்மாண்டமான வெற்றியை அடைய முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -