தீராத பிரச்சனைகள் யாவும் தீர சனிக்கிழமை அன்று இதில் எழுதி எரித்து விடுங்கள்.

arasa maram thirusti
- Advertisement -

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவரும் சொல்லும் பெரிய வார்த்தை பிரச்சனை. பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ்பவர் ஒருவர் கூட கிடையாது. இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தன்னையே அழித்துக் கொண்டவர்கள் ஏராளமானோர். அப்படியானவர்களுக்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பிரச்சனைகள் என்றால் அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பணத்தால் ஏற்பட்ட பிரச்சனை, பிற மனிதர்களால் அல்லது நம்முடைய உடல் உபாதைகளால், தெரியாமல் நாம் செய்த சில தவறுகளால் நாமே சிக்கலில் மாட்டிக் கொண்டு எப்படி வெளியேறுவது என்று தவிப்பது போன்றவை எல்லாம் பிரச்சனை தான். இதை தீர்ப்பதற்கான பரிகாரம் தான் இது.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர அரச மர பரிகாரம்

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் அரச மரத்தடியில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது வெள்ளை நிற பேப்பர், கருப்பு நிற பேனா, கருப்பு நிற நூல். சனிக்கிழமை காலை முதல் மாலை 6 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இந்த பரிகாரத்தை செய்ய முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு வெள்ளை நிற தாளில் கருப்பு நிற பேனா கொண்டு உங்களுடைய பிரச்சனைகள் எதுவோ அதை எழுதுங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகளையும் எழுதலாம். அதன் பிறகு இந்த பேப்பரை சுருட்டி கருப்பு நிற கயிறால் கட்டி விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த பேப்பரை அரச மரத்தடிக்கு கொண்டு செல்லுங்கள். இந்த மரம் கோவிலில் இருந்தாலும் செய்யலாம் . அங்கு மரத்தின் வேர் பகுதியில் மரத்தை தொடாமல் வைத்து அதன் மேல் சிறிய கல் ஏதாவது வைத்து விடுங்கள் இல்லை யெனில் பேப்பர் பறந்து விடும். அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருங்கள். இப்படி அமர்ந்திருக்கும் நேரத்தில் உங்களுடைய பிரச்சனைகள் தீர மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இந்த பேப்பரை அங்கிருந்து கொண்டு வந்து வீட்டிற்கு வரும் வழியில் எரித்து விடுங்கள். பேப்பர் முழுவதுமாக எரிய வேண்டும் சிறு துண்டு கூட எரியாமல் மீதம் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் இதை வீட்டிலும் எரிக்க கூடாது. நீங்கள் வைத்து வணங்கிய மரத்தின் அருகிலும் எரிக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: வீடு எந்நேரமும் வற்றாத பணவரவுடன் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இதை வைத்தால் போதும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்குள்ள பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைவதை உணர முடியும். அவை குறைவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -