திறமை இருந்தும் பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கவில்லையா? இந்த திலகத்தை இட்டுக் கொண்டால் பெயர் புகழ் பதவி அனைத்தும் பெண்களை தேடி வரும்.

amman1
- Advertisement -

தற்போது எல்லா இடங்களிலும் ஆண்களுக்கு நிகரான வளர்ச்சியை பெண்களும் அடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில இடத்தில் ஆண்களும் வேலை செய்கிறார்கள். பெண்களும் வேலை செய்கிறார்கள் எனும் பட்சத்தில், அந்த இடத்தில் கிடைக்கக்கூடிய உயர் பதவிகள் பெயர் புகழ் அனைத்தும், பெண்களுக்கு கிடைப்பதை விட ஆண்களுக்கு அதிகமாக கிடைக்கும். இது ஒரு பக்கம் இருக்க, 10 பெண்கள் ஒன்று கூடி வேலை செய்யக்கூடிய இடத்தில் திறமை இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்காது. திறமை இல்லாதவர்களுக்கு அந்த உயர்ந்த பதவி கிடைத்து விடும். திறமை இருந்தும் உயர் பதவியை பெற முடியாத பெண்களுக்கான ஒரு பரிகாரம் இது. பெண்கள் உயர் பதவியை அடைய தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எல்லா இடங்களிலும் திறமைக்கு ஏற்ற பதவி கிடைப்பதில்லை என்று சொல்லிவிட முடியாது. சில இடங்களில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல், திறமையை பார்த்து பதவியை கொடுக்கக்கூடிய இடங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். சில இடங்களில் நடக்கக்கூடிய தவறுகளை வைத்து ஒட்டுமொத்தமாக யாரையும் குறை கூற முடியாது. சரி குறிப்பை பார்த்து விடுவோம்.

- Advertisement -

கார்போக அரிசி என்பது நாட்டு மருந்து கடைகளில் நமக்கு கிடைக்கும். இதன் பெயர் கார்போக அரிசி. ஆனால், இது பார்ப்பதற்கு ஒரு சிறிய சிறிய விதை போலத்தான் இருக்கும். அதை 50 கிராம் அளவு வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய இந்த கார் போக அரிசியை ஒரு வானலில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். கார்போக அரிசி கருப்பு நிறத்தில் தான் இருக்கும். இருப்பினும் அந்த அரிசியை நீங்கள் மீண்டும் வறுத்து நன்றாக கருக வைத்தால் கூட தவறு கிடையாது.

வறுத்த இந்த அரிசியை நன்றாக ஆற வைத்து நைசாக மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரிசி பொடியை ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மண் அகல் விளக்கில் 1 ஸ்பூன் அளவு கார்போக அரிசியை போட்டு சுத்தமான பசு நெய்யை ஊற்றி குழைத்தால் கருமையான மை கிடைத்தது விடும்.

- Advertisement -

இந்த மையை பூஜை அறையில் வைத்து விடுங்கள். தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து, இந்த மைக்கு சக்தியை கொடுக்க வேண்டும். இந்த மை பூஜை அறையிலேயே பத்திரமாக இருக்கட்டும். அதன் பின்பு தினந்தோறும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நெற்றியில் பொட்டு இட்டுக்கொண்டு, பூஜை அறைக்கு வந்து குலதெய்வத்தை மனதார வேண்டி இந்த மையை லேசாக தொட்டு உங்களுடைய நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உச்சந்தலையில் லேசாக தடவிக் கொள்ளலாம்.

குலதெய்வத்தின் பெயரைச் சொல்லியே இந்த மையை இட்டுக் கொள்ளுங்கள். தினமும் வேலைக்கு செல்லும் முன்பு இந்த மைய இட்டுக் கொண்டு வேலைக்கு சென்றால் பெண்களின் திறமைக்கு ஏற்ற உயர்பதவி நிச்சயம் தேடி வரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. பெண்களுக்கே உண்டான பிரத்தியேக பரிகாரம் இது. பெண்கள் மட்டுமே செய்து பலன் பெறலாம்.

தயார் செய்த மை தீர்ந்து போய்விட்டால், பாட்டிலில் பொடி அரைத்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அதை எடுத்து மீண்டும் அகள் விளக்கில் போட்டு, நெய் விட்டு கலந்து மையாக தயார் செய்து குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி அந்த மைக்கு சக்தி ஊட்டி மீண்டும் புதிய மையை பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த மையை வைக்கும் போது நல்ல பலனை பெற முடியும் என்பதும் நம்பிக்கை. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -