தினமும் இந்த படங்களை பார்த்து வந்தால், அதிர்ஷ்டம் இல்லாத பெண்கள் கூட மகாலட்சுமியின் அம்சமாக மாறி விடுவார்கள்.

lakshmi-women
- Advertisement -

பெண் என்பவள் எப்போதுமே அதிர்ஷ்டமானவள் தான். இந்த பூமியில் பெண்ணாக அவதரித்த எந்தப் பெண்ணும் அதிர்ஷ்டம் கெட்டவள் கிடையாது. எல்லா பெண்களும் மகாலட்சுமியின் ஸ்வரூபமே. முதலில் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தை சரியான முறையில் வழிநடத்திச் சென்று குடும்பத்தில் இருப்பவர்களை பொறுப்போடு கவனித்துக்கொண்டு, அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கக்கூடிய சக்தி பெண்ணிடதில்தான் உள்ளது.

இவ்வளவு அருமை பெருமைகளையும் கொண்ட பெண்களின் அம்சமாக திகழ்வது சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அனுக்கிரகத்தை பெண்கள் முழுவதும் பெற வேண்டும் என்றால் என்ன செய்வது. வீட்டில் பெண்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடத்தில், பின் சொல்லக் கூடிய படங்களை மாட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

சுக்கிரனுக்கு உரிய மிருகங்கள் என்றால் அதில் முதலிடத்தைப் பிடிப்பது வெள்ளையானை. அடுத்தபடியாக பச்சை கிளி, மயில் இறகு, மயில் படம், குதிரை இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பெண்கள் அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். உங்களுடைய வரவேற்பறையில் மேல் சொன்ன படங்களில் ஏதாவது ஒரு படத்தை மாட்டி வைத்தாலும் கூட போதும்.

நீங்கள் சமையலறையில் அதிக நேரம் செலவழிப்பார்கள். சமயலறையில் இருப்பதற்கு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் சமையலறையில் நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடத்தில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு படத்தை, அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 படங்களில் உங்களுடைய மனதிற்கு எது பிடித்திருக்கிறதோ அதை மாட்டி வைத்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது, பெண்களின் மனநிலை எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.

- Advertisement -

உங்களுடைய கைபேசியில் அழகான பச்சை கிளியே டிஸ்ப்ளே வாக வைத்துக் கொள்ளலாம். தினமும் காலையில் கண் விழிக்கும் போது மயில் படம் அல்லது மயிலிறகில் கண்விழிக்கும் போது பெண்களுக்கு நிறைய அதிர்ஷ்டம் உண்டாகும்.

பெண்களை அதிர்ஷ்டசாலிகள், மகாலட்சுமியின் அம்சம் கொண்டவர்கள் என்று சொன்னாலும், சில பெண்களுடைய தலையெழுத்து ரொம்ப கஷ்டப்படும் படி இருக்கின்றது. சில பெண்கள் கையில் காசு இல்லாமல் குடும்பத்தை நல்வழிப் படுத்த முடியாமல், நல்ல கணவர் கிடைக்காமல் குடும்பத்தில் சண்டை சச்சரவு மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருவார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பார்க்கும் போது அவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்பது சாஸ்திர ரீதியான நம்பிக்கை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த விஷயங்களை பின்பற்றி பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -